உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  கனடாவில் இந்தியர்கள் அடுத்தடுத்து கொலை

 கனடாவில் இந்தியர்கள் அடுத்தடுத்து கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில், ஒரே வாரத்தில் இரண்டு இந்தியர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவுக்கு, வேலை மற்றும் படிப்புக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் சென்றுள்ளனர். அங்கு, இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்தபடி உள்ளது. டொரான்டோ பல்கலையில் மூன்றாம் ஆண்டு முனைவர் பட்டப்படிப்பு படித்த ஷிவாங்க் அவஸ்தி, 20, என்ற மாணவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், குற்றவாளியை தேடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் தான், டொரான்டோவைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா என்ற இந்திய பெண் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில், அப்துல் கபூரி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மற்றொரு இந்திய மாணவரும் கொலை செய்யப்பட்டிருப்பது, கனடாவில் வசிக்கும் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Selvaraaj Prabu
டிச 27, 2025 09:46

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க இந்தியா போன்ற நாடுகளில்தான் முடியும். அங்கே எல்லாம் நேர் வழியில், நன்றாக உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம். என்ன செய்ய, எல்லோருக்கும் இந்தியாவில் இருந்து கொண்டே உங்களை போல லச்சம், லச்சமாய் சம்பாதிக்க முடியுமா?


Palanisamy Sekar
டிச 27, 2025 08:38

இனி கனடாவில் வாழ்வது என்பது மிக மிக கடினம். அதிலும் இந்துக்களாக வசிபப்து என்பது பாதுகாப்பற்ற சூழல் என்பதை அறியவேண்டும். சீக்கிய தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அங்கே யாருமே இல்லை பணம் அவர்களிடம் ஏகத்துக்கு குவிந்துள்ளது. அதனால் அவர்களின் தூண்டுதலால் கூட கூலிப்படையால் இதுபோன்ற கொலைகள் தொடரும் என்பதுதான் நிஜம்.


தாமரை மலர்கிறது
டிச 27, 2025 08:18

மேற்கத்திய நாடுகளில் பெரிய அளவில் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை சமூக வலைத்தளங்களில் தூண்டிவிடுகிறார்கள். ஒரு சிலர் லைக்ஸ் மற்றும் வியூஸ் க்காக இதை செய்கிறார்கள். இதன் விபரீத விளைவு இந்தியர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். இதில் வேதனையிலும் வேதனை, இந்த செய்தியை கேட்டு, வெள்ளைகார்கள் சந்தோசம் தான் அடைகிறார்கள்.


Haja Kuthubdeen
டிச 27, 2025 11:38

உங்களை போன்றோருக்கு பாலைவன மக்களை பற்றி அவதூறு சொல்வதுதானே முக்கிய வேலையே...வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாடும் சந்தோசத்துடனும் இருக்கும் நாடுகள் அரபு நாடுகளே...காரணம் அங்குள்ள சட்டதிட்டங்கள்...


Raj
டிச 27, 2025 08:14

இத்தனை நிகழ்வுகள் நடந்தாலும், இன்னும் இந்தியாவிலிருந்து மேல் படிப்பு படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.


vaiko
டிச 27, 2025 06:29

இவர்களுக்கு அமெரிக்கா, கனடா, மற்றும் வெளிநாடுகளில் என்ன வேலை?


Senthoora
டிச 27, 2025 08:53

குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கணும், என்ஜாய் பண்ணனும்.


Haja Kuthubdeen
டிச 27, 2025 11:42

நல்ல சம்பளம்..உழைப்பு குறைவு..எல்லோரையும் திட்டி நொட்டணம் சொல்லி கொண்டு சந்தோசமான வாழ்வு..அதனால்தான் கனடா..அமெரிக்கா..யூரோப் நோக்கி படையெடுப்பது...


Haja Kuthubdeen
டிச 27, 2025 11:43

correct


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை