UPDATED : மே 19, 2025 02:06 PM | ADDED : மே 19, 2025 06:42 AM
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய, ஜோ பைடன் தற்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு உடல்நலம் அதிகமாக பாதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என டாக்டர்கள் தெரிவித்தனர். இது நோயின் தீவிரத்தை குறிக்கிறது. பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து டாக்டர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். ''தீவிரமான வகைப் புற்றுநோயாக இருந்தாலும் அதை குணப்படுத்த முடியும்'' என பைடனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையே, ''புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது'' என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.அதிபர் டிரம்ப் வருத்தம்
''ஜோ பைடனின் சமீபத்திய மருத்துவ நோயறிதலைப் பற்றி அறிந்து நான் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவாகவும், வெற்றிகரமாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்'' என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.பிரதமர் மோடி வாழ்த்து
''ஜோ பைடன் உடல்நிலை குறித்து செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்'' என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.