உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் முதல் ஏ.ஐ., அமைச்சரை நியமித்தது அல்பேனிய அரசு

உலகின் முதல் ஏ.ஐ., அமைச்சரை நியமித்தது அல்பேனிய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டிரானா : 'ஏஐ' எனப்படும், செயற்கை நுண்ணறிவு அமைச்சரை, அல்பேனியா அரசு நியமித்துள்ளது. மெய்நிகர் வடிவில் செயல்படும் இந்த அமைச்சர், ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இதன் வாயிலாக தொடர்ந்து நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக எடி ரமா பொறுப்பேற்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q4y3a8ln&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் சோஷலிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, ஏஐ அமைச்சருக்கான அறிவிப்பை பிரதமர் எடி ரமா வெளியிட்டார்.இதுகுறித்து அவர் பேசியதாவது:ஏஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக 'டியெல்லா' என்ற அமைச்சரும் இந்த அரசில் அங்கம் வகிப்பார். அல்பேனிய மொழியில் இதன் அர்த்தம் சூரியன். மெய்நிகர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சர், அரசு ஒப்பந்தப் பணிகள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நிர்வகிப்பார். இதன் வாயிலாக 100 சதவீதம் ஊழல் முறைகேடுகள் இன்றி, ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு பொது நிதியும் முற்றிலும் வெளிப்படையானதாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, கடந்த ஜனவரியில், அந்நாட்டு அரசின் டிஜிட்டல் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட டியெல்லா, இதுவரை 36,600 டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சுமார் 1,000 சேவைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kulandai kannan
செப் 13, 2025 13:14

இதுபோல் 90s kidsக்கு வாழ்க்கை துணையும் ஏற்பாடு செய்தால் நலம்.


Barakat Ali
செப் 13, 2025 09:28

தமிழ்நாட்டில் எப்போ ???? பார்த்து துணை, இணை விளையாடிடப்போகுது .... அப்புறம் இருக்கவே இருக்கு பாலிடாயில் ....


V RAMASWAMY
செப் 13, 2025 09:14

நமது நாட்டிற்கு குறிப்பாக லஞ்சம் தலை விரித்தாடும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அத்திவாசியமான தேவை.


Thravisham
செப் 13, 2025 02:35

திருட்டு த்ரவிஷன்கள் அதையும் லஞ்சத்தால் மாற்றி விடுவார்கள்


HoneyBee
செப் 13, 2025 08:48

பெண் என்று தூக்கி எறிந்து விட்டு மறு வேலை பார்க்கும் இந்த திராவிட கூட்டம். கமிஷன் அடிக்க முடியாதே


தியாகு
செப் 13, 2025 00:56

ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹி...ஹி...ஹி... கட்டுமர திருட்டு திமுகவினர்: என்னமா அங்க சத்தம்? இல்லங்க ஊழலை கண்டுபிடிக்க ஒரு ஏ ஐ அமைச்சராம். கட்டுமர திருட்டு திமுகவினர்: கொஞ்சம் டுமிழ்நாட்டுக்கு அனுப்பி வைங்க. அந்த ஏ ஐ அமைச்சரையே ஊழல் மூலம் ஆட்டையை போட்டுகாட்டுறோம். ஹி...ஹி...ஹி...


SANKAR
செப் 12, 2025 23:38

astonishing.first expected this in Japan.but a kutty naadu did it!


சிட்டுக்குருவி
செப் 12, 2025 23:31

பேஷ் பேஷ் நமது நாட்டில் நடக்கும் ஊழல்களை கண்டறிந்து தானாகவே குற்றங்களை பதிவு செய்யும் AI ரோபோட்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் .


KOVAIKARAN
செப் 12, 2025 22:52

சூப்பர் A I அமைச்சரை லஞ்சம் கொடுத்து வளைக்கமுடியாது. மற்ற அமைச்சர்கள் பயமுறுத்த முடியாது. நல்ல ஏற்பாடு. நமது தமிழகத்தில் முதலில் இந்த மாதிரியான AI அமைச்சரைக் கொண்டு வரவேண்டும்.


balakrishnan muthuperumal
செப் 12, 2025 22:40

நமது நாட்டிலும் ஒவ்வொரு அமைச்சரவையிலும் இந்த மாதிரி ஒரு அமைச்சர் இருந்தால் கொஞ்சம் ஊழல் குறையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை