உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேர்தல் புறக்கணிப்பா? ஆலோசிப்போம் என்கிறார் தேஜஸ்வி

தேர்தல் புறக்கணிப்பா? ஆலோசிப்போம் என்கிறார் தேஜஸ்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பீஹார் சட்டசபை தேர்தல் புறக்கணிப்பது என்ற யோசனை ஒரு திட்டம் தான். அது குறித்து ஆலோசனை நடத்துவோம். கூட்டணி கட்சிகள் மற்றும் மக்களின் கருத்து கேட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்'', என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி கூறியுள்ளார்.பீஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. போலி வாக்காளர்களை தடுக்கும் வகையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் வாயிலாக பீஹாரில் 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை பார்லிமென்டிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சி தலைவருமான தேஜஸ்வி கூறியதாவது; போலி வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி தேர்தலை சந்திக்க பா.ஜ., விரும்பினால், அவர்களுக்கு பதவி நீட்டிப்பை வழங்கலாம். ஒட்டுமொத்த நடவடிக்கையும் நேர்மையற்ற முறையில் இருக்கும்போது தேர்தலை நடத்துவதில் என்ன பயன்?தேர்தலை புறக்கணிப்பது என்பது ஒரு வாய்ப்பு. அது குறித்து யோசிப்போம். இதில் இறுதி முடிவு எடுக்கும் முன்னர் பொது மக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் கருத்து கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கூத்தாடி வாக்கியம்
ஜூலை 25, 2025 16:30

இதுல எத்தன பேர் பீகார் அரசாங்க வேளையில் இருக்கா நுங்களோ தெரியல


vadivelu
ஜூலை 24, 2025 13:38

ஏதோ ஒரு லட்சம் இரண்டு லட்சம் பேரை பங்களா தேசில் இருந்து கொண்டு வந்து ஒட்டு போட வச்சு இருந்தா கூட பரவா இல்லை. நீ பாட்டுக்கு ஆறு லட்சம் ஏழு லட்சம் பேரை உள்ளே விட்டு அவனுக்கெல்லாம் அடையலா சீட்டை கொடுத்து, அது போதாது என்று அடையாள சீட்டு இல்லாதவனை எல்லாம் இறந்து போன 18 லட்சம் பேறுக்காக ஒட்டு போட வைக்க வச்சு இருந்தா ஆண்டவனுக்கே பொறுக்க வில்லை, ஆப்பு வச்சுட்டான். இப்போ எதற்கு தேர்தலில் நிக்கணும்.


பேசும் தமிழன்
ஜூலை 24, 2025 07:58

ஏம்பா அவர்கள் நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத பங்காளதேஷ் ஆட்களை கொண்டு வந்து போலி வாக்காளர்களையா சேர்கிறார்கள்.. நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத ஆட்களை போலியாக இருப்பவர்களை தானே நீக்குகிறார்கள். அதிலே உங்கள் புள்ளி வைத்த இண்டி கூட்டணி ஆட்களுக்கு என்ன பிரச்சினை. ஓஹோ ஒருவேளை அந்த கள்ள ஓட்டில் தான் வெற்றி பெற நீங்கள் ஏதாவது திட்டம் போட்டு இருந்தீர்களா. அது முடியாமல் போனதால் தோல்வி பயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்களா.. உண்மையான நாட்டு மக்கள் யாரும் உங்களுக்கு ஓட்டு போடுவதில்லை.. அப்படி தானே ???


நிக்கோல்தாம்சன்
ஜூலை 24, 2025 05:40

நீயெல்லாம் இன்னமும் எதற்கடா உயிரோடு ?


Indhuindian
ஜூலை 24, 2025 04:32

போலி வாக்காளர்களை கண்டு பிகிக்கறதுலே தேர்தல் கமிஷன் ஈடுபட்டு இருக்கிறது அந்த மாதிரி செய்யாக்கூடாதுன்னு கேசு போட்டுருக்காங்க. அந்த மாதிரி செஞ்சா நாங்க எப்படி கள்ள வோட்டு, செத்து போனவங்க வோட்டு, நாடு கடத்தப்படவேண்டியவங்களோட வோட்டெல்லாம் நாங்க போடா முடியும். அதனாலே ச்சீ ச்சீ இந்த பக்ஷம் புளிக்கும்


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 23:07

சூப்பர். வெற்றிபெற முடியாது என்று முன்பே தெரிந்து விட்டதால் பயந்தான்கொள்ளிகள் புறமுதுகிட்டு ஓடுகிறார்கள். ஜனநாயகத்தில் பங்கேற்க வக்கில்லாதவர்களுக்கு ஒட்டு போடுவதே வீண். எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பை இந்திய மக்களும் தேர்தல் ஆணையமும் சுப்ரிம் கோர்ட்டும் வரவேற்ப்பார்கள். எதிர்க்கட்சிகள் இல்லாத இடத்தில் தேர்தல் நடத்துவதே வீண் செலவு.


Rajasekar Jayaraman
ஜூலை 23, 2025 22:36

நீ தற்கொலை கூட செய்து கொள் அந்நியன் இங்கு ஒட்டு போடமுடியாது டெபாசிட் கிடைக்காது என்ற பயத்தில் புரக்கனிப்பா தேச துரோகிகளா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை