உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் பேச்சுக்கு தயார் அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் பேச்சுக்கு தயார் அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்

நியூயார்க்:ஐ.நா., கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் முழுமையான, விரிவான, தீர்வை நோக்கிய பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது,” என்றார். ஐக்கிய நாடுகள் பொது சபையின் 80வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று பேசியதாவது: இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளிலும், முழுமையான, விரிவான, தீர்வை மையப்படுத்திய பேச்சுக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. உலக நாடுகள் முன்னிலையில் நான் தரும் உண்மையான, தீவிரமான முன்மொழிவு இது. பேச்சு மற்றும் துாதரக உறவு மூலம் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் பாகிஸ்தான் நம்பிக்கை வைத்துள்ளது. தெற்கு ஆசியாவில் போரை தவிர்க்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்த முயற்சிகள் சிறப்பானவை. அதற்காகவே அவருக்கு நோபல் அமைதி பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்தது. இது நாங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச நன்றிக் கடன். மே மாதம் நடந்த 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்குப் பின் ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது, இந்தியாவின் ஏழு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். பாகிஸ்தான், அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறது. எங்கள் நாட்டில், வெளிநாட்டின் நிதி ஆதரவு பெற்ற தெஹ்ரிக் - இ --தலிபான் - பாகிஸ்தான், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N Sasikumar Yadhav
அக் 01, 2025 17:55

பேச்சுவார்த்தை எதுவுமில்லை கவுரவமாக நீங்க அதாவது பாகிஸ்தானிய பயங்கரவாத கும்பலுங்க ஆக்கிரமித்து கொண்டிருக்கும் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேறி விடுங்க


suresh Sridharan
செப் 27, 2025 23:44

நீங்கள் பேச தயார் ஆனால் இந்தியா பேச தயார் இல்லையே ஏனென்றால் நீங்கள் தீவிரவாதத்தைப் நிறுத்தப் போவது இல்லை அதனால் நாங்கள் பேசப்போவது இல்லை உங்கள் நாட்டு மக்களையே விமானம் மூலம் சுட்டுக் கொல்லும் நீங்கள் அடுத்த நாட்டுடன் எப்படி இணக்கமாக செயல்படுவீர்கள் இணக்கமாக இருப்பீர்கள்


Shivakumar
செப் 27, 2025 12:36

உன்னிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அப்படி பேசவேண்டும் என்றால் நீ பிடித்து வைத்துஇருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியவிடம் கொடுத்துவிட்டு கேளு. விருப்பம் இருந்தால் நாங்கள் பேசுகிறோம். இல்லையென்றால் உன்னிடம் பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது. நீ அந்த அமெரிக்கா மெண்டல் இடமே பேசிக்கொள்ளவும்.


veeramani
செப் 27, 2025 09:42

பாகிர்ஸ்தான் முதலில் காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் . பின்னர் பேச்சு நடத்தலாம்


Nathan
செப் 27, 2025 07:13

நீ முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறு


புதிய வீடியோ