உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கத்தாரிலிருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

கத்தாரிலிருந்து இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தோஹா: யு.ஏ.இ., கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி காத்தரிலிருந்து இந்தியா புறப்பட்டார். யு.ஏ.இ.,நாட்டின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பின் சார்பில் பிரமாண்ட இந்துகோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க இரு நாள் பயணமாக பிரதமர் யு.ஏ.இ., சென்றார். அங்கு கோயிலை திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்து கத்தார் சென்றார். தோஹாவில் கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகள் பயணத்தை முடித்த பின் நாடு புறப்பட்டார். மோடியின் கத்தார் பயணம் சிறப்பாக அமைந்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி