உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எச்1பி விசா விதிகளை கண்காணிக்க புராஜெக்ட் பயர்வால் திட்டம் துவக்கம்

எச்1பி விசா விதிகளை கண்காணிக்க புராஜெக்ட் பயர்வால் திட்டம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் 'எச்1பி' விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்ட அதே நாளில் 'புராஜெக்ட் பயர்வால்' திட்டத்தை துவங்குவதாக அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர் அங்கு தங்கி வேலை செய்வதற்காக, எச்1பி விசா வழங்கப்படுகிறது. கடந்த 1990ம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான கட்டணம் முன்பு 1.5 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக பல மடங்கு அதிகரித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், எச்1பி விசாவுக்கான கட்டண உயர்வு என்பது, அமெரிக்க பணியாளர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதுஎனவும், இந்த விசாவை முறைகேடாக பயன்படுத்தி, அமெரிக்க தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை தடுக்கவே இக்கட்டண உயர்வு எனவும் டிரம்ப் நிர்வாகம்தெரிவித்துள்ளது. எச்1பி விசாவுக்கான கட்டண உயர்வு குறித்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட அதே நாளில், அந்நாட்டு தொழிலாளர் நலத்துறையும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது எச்1பி விசா அமலாக்கத்தை கண்காணிக்க 'புராஜெக்ட் பயர்வால்' திட்டத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: எச்1பி விசா மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தகுதியான அமெரிக்க பணியார்களுக்கு பணி வழங்க மறுப்பது, நியாயமான சந்தை மதிப்பில் வழங்க வேண்டியதைவிட குறைவான ஊதியத்துக்கு வெளிநாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்துவது, தற்போதுள்ள அமெரிக்க பணியாளர்களை இடமாற்றம் செய்ய அல்லது அவர்களுக்கு பதிலாக எச்1பி பணியாளர்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பிராஜெக்ட் பயர்வால் வாயிலாக, விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களில் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, தொழிலாளர் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள் மீறும் நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். தகுதிவாய்ந்த அமெரிக்கர்களுக்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்வதன் வாயிலாக, மிகவும் திறமையான அமெரிக்க பணியாளர்களின் உரிமைகள், ஊதியங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதே புராஜெக்ட் பயர்வால் திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

KOVAIKARAN
செப் 22, 2025 09:29

அது உண்மைதான். அமெரிக்காவில் IT தொழில் செய்யும் நமது இந்திய நிறுவனங்களான TCS, WIPRO, மற்றும் பல நிறுவனங்கள், அமெரிக்கர்களுக்கு, அதிகமான ஊதியம் கொடுப்பதை தடுத்து லாபங்களை அதிகரிக்க, அங்கு பணிபுரியும், அமெரிக்கர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டு அல்லது குறைந்த சம்பளத்தில் வேறு ஒரு கிளைக்கோ, ஊருக்கோ மாற்றப்படுகிறார்கள். அவர்களின் இடங்களில், H-1B விசா மூலம் வரும் வெளிநாட்டவரை அமர்த்துகிறார்கள். இது, நமது நாட்டு நிறுவனங்கள் அங்கே சென்ற நாள் முதல் நடந்து வருகிறது. நம்மவர்கள் சொல்லும் காரணம் என்றவென்றால், எங்களுக்கு, இங்கே தகுதியுள்ள மென்பொருள் engineer அல்லது STEM எனப்படும், Science, Technology, Engineering, Mathematics வல்லுநர்கள் அமெரிக்காவில் கிடைக்கவில்லை என்பதே. ஆரம்பத்தில், அதாவது கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த நிலை இருந்தது. ஆனால், அது படிப்படியாக மாறிவருகிறது. அவ்வாறு நமது நிறுவனங்கள் அங்கு செய்த இந்த காரியங்களை, அமெரிக்கா அரசு பத்து ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கைகளும் எடுத்தன. வேலை இழந்த அமெரிக்கர்களும், குறைந்த சம்பளம் கொடுப்பதற்காக, வெளிநாட்டு ஆட்களை கொண்டுவந்து, எங்களை பணியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்று அங்கே நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்தார்கள். அதற்காக, நீதிமன்ற உத்தரவின்படி, நமது நிறுவனங்கள் மிகப் பெரிய தொகையை அபராதமாக செலுத்தவேண்டி வந்தது சரித்திரம். எனவே டிரம்ப் அவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க மக்களின் அமோக ஆதரவு உள்ளது. அங்குள்ள நிறுவனங்கள் தான் இவற்றை சரி செய்து சமாளிக்க வேண்டிவரும். தற்சமயம் 3.50 லட்சம் இந்தியர்கள் அங்கே H-1B விசாவில் பணிபுரிகின்றனர். இதனால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படப்போவது, நமது இந்திய பணியாட்கள் தான். ஆனால் இது நாட்டிற்கு ஒரு blessing in disguise - வேறு உருவத்தில் வந்த ஆசீர்வாதம் என்றே கூறவேண்டும். நமது மத்திய அமைச்சர்களும், மென்பொருள் நிறுவன தலைவர்களும் அங்குள்ள நமது அனுபவமிக்க பணியாளர்களை வரவேற்க தயாராக உள்ளதாக அறிக்கை விட்டுள்ளார்கள். எனவே அங்கு அமெரிக்காவில் கிடைத்த சம்பளங்களை விட குறைவாகவே இங்கே, இந்தியாவில் கிடைத்தாலும், வேலையாவது கிடைக்கிறதே என்ற நிம்மதியில் அவர்கள் இருப்பார்கள். அவர்களது அனுபவம் நமது நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கு அனுகூலம். எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 22, 2025 08:00

பேசாமல் ஹச் 1 பி பயனாளர்கள் அனைவருக்குமான சம்பள விநியோகத்தை இந்நிறுவனமே முன்னின்று செய்யலாம். ஹச் 1 பி பயனாளர்கள் சம்பளத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் வாங்கி கணக்கில் வரவு வைத்துவிட வேண்டும். அடுத்தநாள் சம்பந்தப்பட்ட ஊழியரின் கணக்கில் இந்நிறுவனமே அவர்களின் சம்பளத்தை வரவு வைக்கும். இப்படிச் செல்லுவதால் வெரி எந்த வழியிலும் ஹச் 1 பி ஊழியர்கள் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்படும். எத்தனை ஹச் 1 பி பயனாளர்கள் ஊழியர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எங்கெங்கு வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் போன்ற அனைத்து விபரங்களும் இந்நிறுவனத்திடம் கண்காணிப்பில் இருக்கும். மொத்தத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் அடிமைகள் நிர்வாகத்துறை. எப்படி ஐடியா. இனி இந்தியர்கள் இங்கு வராதீர்கள், உங்கள் நாட்டை முன்னேற்றும் வழியை பாருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். எல்லாம் நன்மைக்கே.


Indian
செப் 22, 2025 07:19

புராஜெக்ட் பயர்வால் திட்டத்திற்க்கே இந்திய வம்சாவளியினர் தேவைப்படுவார்கள் ..


Anantharaman
செப் 22, 2025 05:52

தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் போல அமெரிக்காவும் மண்ணின் மைந்தர்களுக்கு பாராடுக்கள். மோடியின் வசுதைவ குடும்பகம் உலக அளவில் பிசுபிசுக்கிறது. மக்கள் மனம் குறுகிக் கொண்டே போகிறது.


Kasimani Baskaran
செப் 22, 2025 03:41

பெயர் விடுவதில் மன்னர்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை