உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தியோர் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 8 பேர் பலியாகினர்.பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால், அங்கு சந்தைகள், கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்துடன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.பாக்., அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கங்கள் எழுப்பினர்; பேரணிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பாக்., ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போர்க்களமாக மாறியுள்ளது.அவாமி அதிரடி குழு தலைமையிலான போராட்டங்கள், கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன. கடந்த வாரம் கைபர் பக்துன்க்வாவில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் நடந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 01, 2025 20:15

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி, இதே இந்த சைடில் நடந்தால் என்ன தலைப்பு இருக்கும்? காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவலுக்கு இந்திய ராணுவம் பதிலடி. 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. ஒருவேளை பாக்கி ஆக்கிரமித்த காஷ்மீரை நாமளும், நம்ம ஏரியாவை அவங்களும் எக்சேஞ்ச் பண்ணி விட்டா கம்முன்னு இருப்பாங்களா? இந்த ஐடியாவுக்காக எனக்கு நோபல் பரிசு எல்லாம் வேண்டாம், ப்ளீஸ்


R. SUKUMAR CHEZHIAN
அக் 01, 2025 18:56

பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள் நமது இராணுவத்தை அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் எஞ்சிய பகுதிகளை மீட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


SANKAR
அக் 01, 2025 19:21

this should have been done during operation Sindhoor itself


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 04:58

செஞ்சிட்டாலும்..


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 08:21

அப்பூகோள நிலப்பகுதியில் பல ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கும் போது அப்பகுதி மக்கள் பாகிஸ்தான், இந்தியா என்று பேதம் பார்க்கவில்லை. இரண்டு நாடுகளையும் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக மட்டுமே கருதுகிறார்கள் என்பது தெளிவாகிறது. அப்பகுதியில் அமைதி திரும்பவேண்டும் என விரும்பினால் மேலே சொன்னதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்


nagendhiran
அக் 01, 2025 18:19

பாம்புக்கு பால்"வார்க்ககூடாது? இடம் நம்முடையுது அதை வேண்டுமனாலும் மீட்களாம்? அனால் அங்கு இருக்கும் பாகிஸ்தான் மக்களை ஒரு போதும் ஏற்க்ககூடாது?


SANKAR
அக் 01, 2025 19:26

no sir.they do NOT want to be ruled by Pak.going to the extent of sacrificing their life for this.so they automatically become our brothers.unlike popular public opinion ALL muslims are not barbaric and anti india.think what Oiwasi one of top leaders of muslims talked during Sindhoor.Modi himself appreciated it and sent him in one of his groups to foreign countries.


சமீபத்திய செய்தி