உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேட்டோ போன்ற ராணுவ கூட்டமைப்பு: அரபு - முஸ்லிம் நாடுகள் கூட்டத்தில் முடிவு

நேட்டோ போன்ற ராணுவ கூட்டமைப்பு: அரபு - முஸ்லிம் நாடுகள் கூட்டத்தில் முடிவு

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற அரபு - முஸ்லிம் நாடுகளின் அவசர உச்சி மாநாட்டில், 'நேட்டோ' போன்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், இரண்டாண்டுகளை எட்டியுள்ளது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான கத்தாரில் பதுங்கியுள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் சமீபத்தில் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், அரபு லீக் எனப்படும் வளைகுடா நாடுகளின் அமைப்பு மற்றும் ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.கத்தாரின் கோரிக்கையை ஏற்று, இந்த அமைப்புகளைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப் பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசித்தனர்.அப்போது, 'நேட்டோ' எனப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ராணுவ ஒத்துழைப்பு அமைப்பு போன்ற ஒரு ராணுவ கூட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தை எகிப்து முன்மொழிந்துள்ளது. அதன்படி, 22 அரபு லீக் நாடுகளும் சுழற்சி முறையில் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும். கத்தார் மீதான தாக்குதல், இனி வரும் நாட்களில் மேற்காசியாவில் கண்மூடித்தனமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியிருப்பதால் இப்போது மீண்டும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

நிக்கோல்தாம்சன்
செப் 17, 2025 15:14

அப்படி ஒரு கூட்டணி வைத்தால் பிச்சைக்காரர்கள் ஏற்றுமதியை குறைக்குமா பாகிஸ்தான் ?


jaya
செப் 17, 2025 14:29

முன்னதாக வந்த செய்திதான். இஸ்ரேலியர்களின் கண்டுபிடிப்புகளை இவர்கள் ஒதுக்கி விட்டால், ஒட்டகத்திலேறி பாலைவனத்தில் கொட்டாய் போட்டு பொழப்ப ஓட்டவேண்டியதுதான்.


அப்பாவி
செப் 17, 2025 12:43

யாருகிட்டேயும் ஆயுதம் வாங்காம நீங்களே தயாரிச்சுக்கோங்க. உங்க கிட்டே இல்லாத பணமா?


Saai Sundharamurthy AVK
செப் 17, 2025 12:24

இஸ்லாமிய நாடுகளின் கூட்டணி என்றைக்கும் உருப்படாது. ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளும் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவை. அவர்களின் உடை, அணிகலங்களே வெவ்வேறானவை. குறிப்பாக சொல்லப் போனால் பாகிஸ்தான் முஸ்லிம்களையும், பங்களாதேஷ் முஸ்லிம்களையும் சவூதி, ஐக்கிய அரபு , பஹரைன், கத்தார் நாட்டு முஸ்லிம்களுக்கு சுத்தமாக பிடிக்காது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மசூதி உண்டு. ஒரு ஜாதிக்காரன் இன்னொரு சாதியின் மசூதியில் தொழுகை நடத்த மாட்டான். அவ்வளவு வெறித்தனம் இருக்கிறது. மேலும் இஸ்லாமிய நாடு இன்னொரு இஸ்லாமிய நாட்டுடன், உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் மோதல் போக்கை கடைப்பிடிக்கும்.


Thravisham
செப் 17, 2025 11:59

இஸ்ரேலுக்கு பயந்தவனெல்லாம் ஒருத்தன் மேல ஒருத்தன் படுத்துக்கிடுங்க


பேசும் தமிழன்
செப் 17, 2025 08:55

மூர்க்க ஆட்கள் எல்லாம் ஒன்றாக சேர்வது நல்லதுக்கு தான். சண்டை என்று வந்தால் கூண்டோடு மேலே செல்ல வசதியாக இருக்கும். ஒரு மதம் எந்தளவுக்கு வேகமாக வளர்கிறதோ. அதை விட வேகமாக அழியும்.... அது தான் இயற்கை.


நிக்கோல்தாம்சன்
செப் 17, 2025 07:06

மற்றைய நாடுகளை அடிமைப்படுத்துவதை விட்டுவிட்டு அமெரிக்காவை ஆட்டைய போட்டா முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தலாம் செய்வார்களா


ManiK
செப் 17, 2025 06:54

இந்த ரராணுவ கூட்டமைப்பு மிகவும் ஆபத்தானது. இதை வழிநடத்த அறிவுள்ள, பொறுப்பான நாடு எதுவும் இருப்பதாக தெரிபவில்லை.


ராமகிருஷ்ணன்
செப் 17, 2025 06:08

தனித்தனியாக மத பயங்கரவாதம் செய்து வந்தவர்கள் இப்போ கூட்டு பயங்கரவாத செயல்களை செய்ய திட்டமிடப்படுகிறது. இது வெற்றி அடைய கூடாது. உலகத்திற்கு நல்லது இல்லை. மூளை சலவை செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் இதற்கு பலியாக வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே மற்ற நாடுகள் எதிர்க்க வேண்டும்.


Kasimani Baskaran
செப் 17, 2025 04:10

எண்ணெய் வளம் நிரந்தமானது அல்ல என்பதை இவர்கள் என்று அறிவார்களோ அன்றுதான் தீவிரவாதத்துக்கு ஒரு முடிவு வரும். ஹமாஸ் தலைவர்களை உள்ளூரில் வைத்து கூட்டம் போடாவிட்டால் அப்படியே விட்டு விடுவார்களா? பாகிஸ்தான், துருக்கி போன்ற தீவிரவாத ஆதரவு நாடுகளை கூப்பிட்டு வைத்து பேசியதெல்லாம் ரொம்பவே ஓவரான வேலை.


சமீபத்திய செய்தி