உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்புடன் பேசும் திட்டமே எங்களிடம் இல்லை:ஈரான் விவகாரத்தில் ரஷ்யா திட்டவட்டம்

டிரம்புடன் பேசும் திட்டமே எங்களிடம் இல்லை:ஈரான் விவகாரத்தில் ரஷ்யா திட்டவட்டம்

மாஸ்கோ: ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலின் நீட்சியாக, டிரம்பிடம் அது பற்றி பேசும் திட்டமே இல்லை என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.பெரியண்ணன் அமெரிக்காவின் தலையீடு ஈரான், இஸ்ரேல் பிரச்னையில் எதிரொலித்தே விட்டது. ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீதான தாக்குதல் வளைகுடா நாடுகளிலும், மற்ற உலக நாடுகள் மத்தியிலும் ஒருவித பதற்றத்தை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவின் தாக்குதலையும், ஈரானின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்தும் மற்ற நாடுகளை விட ரஷ்யா, சீனாவின் பார்வை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இப்படியான சூழலில், இந்த பிரச்னை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் ரஷ்ய அதிபர் புடின் பேசும் திட்டம் இல்லை என்று க்ரெம்பிளின் மாளிகை அறிவித்து உள்ளது. இதுகுறித்து க்ரெம்பிளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது; இப்படியான ஒரு திட்டம் எங்களிடம் தற்போதைக்கு இல்லவே இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் தொலைபேசியில் அவரிடம் (டிரம்ப்) பேசப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அதே நேரத்தில் ஈரானை தாக்கியதன் மூலம் அமெரிக்கா எதை சாதித்தது என்று ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை தாக்கியதன் மூலம் அமெரிக்கர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்? அணுசக்தி நிலையத்தின் முக்கியமான உள் கட்டமைப்பு கூட சிறிதும் பாதிக்கப்படவில்லை என்று கூறி உள்ளார்.அண்மையில், உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையேயான போர் பற்றி கருத்துக் கூறிய டிரம்ப், புடின் ஒரு பைத்தியம் என்றும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேளாதவர் என்றும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramaraj P
ஜூன் 23, 2025 07:16

பாவம்!


நிக்கோல்தாம்சன்
ஜூன் 23, 2025 06:54

ட்ரம்ப் போன்ற ஈகோயிஸ்டுகள் அழியும் நாள் நல்ல நாள் அல்லவே


Asagh busagh
ஜூன் 23, 2025 00:44

புடின் ஒரு பாம்பு. சீனாகிட்ட தொப்பிய கையில் வைத்து பிச்சை எடுத்தார். சிரியாவில வில்லன் அஸாதை கைவிட்டார். சிந்தூர் நடந்தபோது இந்தியாவை கைவிட்டார். யுக்கிரைனிற்கு எதிரான போரின் ஆரம்பத்தில் தினரிய போது ட்ரோன்கள் கொடுத்து உதவிய ஈரானை இப்ப கைவிட்டார். இந்த போக்கிரியை ஹிரோவா இந்தியாவில கொண்டாடுறாங்க. மலர் கூட அவருக்கு எதிரான கருத்த போடமாட்டாங்க. பலமுறை போட்டாச்சு. ஸோவியத் ரஷ்யாவும் புடினின் ரஷ்யாவும் ஒன்றல்ல. காலத்துக்கு ஏற்ற போல கேம்ப மாத்துலனா இந்தியாவுக்கு ஆபத்து தான். இஸ்ரேலை போல அமெரிக்காவை நட்பு நாடா மாத்தினா, பாக்கிஸ்தானையும் ஈரானை போல அடிச்சு தூக்கலாம். இல்லனா சீனாவோட போட்டி போட வேண்டிய நேரத்துல சொங்கி பாகிஸ்தானோட லெவலிலையே காலம் முழுக்க தொங்க வேண்டியதாகிடும்.


M Ramachandran
ஜூன் 22, 2025 23:59

தற்போனது உள்ள ஐ நா சபைய்யய்யேயே கலைத்து விட வேண்டும். வீட்டோ பவரை எடுக்க வேண்டும் வீட்டோ பவர் தவறாக உபயோக படுத்து கிறார்கள். சிறிய நாடாக இருந்தாலும் அதன் மக்கள் நலன் நாடும் மக்களின் நலம் நாடும் நாட்டையும் சேர்க்க வேண்டும். முக்கியமாக தீவிர கம்யூனிச யேதேச்சிகார மக்கள்ளை அடிமைய்யகளாக நடத்தும் மிரட்டும் ராணுவு கட்டமைய்யப்புடைய நாட்டை நாடு பிடிக்கும் கொள்கைகையுடைய நாட்டுகளையும் கண்டிக்கும் திறன் வேண்டும். இபோதுள்ள சீனா அமெரிக்காக போன்ற வல்லரசுகள் தங்கள் ராணுவ பலத்தை பெருக்கி கொண்டு மற்ற நாடுக்களை மிரட்டும் தொனியுடன் பேசும் நாடுகளை தட்டி கேட்கும் உரிமை சபைக்கு வேண்டும்.


ksv rajan
ஜூன் 23, 2025 02:00

மிகவும் சரியான கருத்து


Haja Kuthubdeen
ஜூன் 23, 2025 10:13

மிக மிக சரியாண கருத்து...குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் எதற்கு பவர்!!!


Naga Subramanian
ஜூன் 22, 2025 22:08

டிரம்ப் பின் போக்கு சரியில்லை. ஒருபக்கம் பாகிஸ்தானின் fake மார்ஷல் அசிம் முனீருக்கு விருந்து வைப்பதும், யாரையும் மதிக்காமல் பேசுவதும், அவர் ஒரு மட்டமான ரகம் என்பது புரிகிறது.


Ramesh Sargam
ஜூன் 22, 2025 21:59

அப்படி டிரம்புடன் ரஷ்யா அதிபர் பேச நினைத்தாலும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் செவி மடுக்க மாட்டார். டிரம்ப் மிகவும் தலைகனம் பொருந்தியவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை