உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க்கில் சாலை விபத்து; இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

நியூயார்க்கில் சாலை விபத்து; இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் இருவர் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நியூயார்க்கில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். இது குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் கிளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் மானவ் படேல் மற்றும் சவுரவ் பிரபாகர் ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.இந்த கடினமான நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். நாங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

TMM
மே 13, 2025 09:07

படிக்கச்செல்லும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு படிக்கச்செல்லும் முன்பு DOS AND DON’S போன்றவைளை கற்றுகொடுத்து அரசு சார்பில் பயிற்சி அளித்து அனுப்பினால் இதுபோன்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.இது போன்று நிகழ்வுகள் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது