உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சபரிமலை பக்தர்கள் யாத்திரை: இலங்கை அரசு புதிய முடிவு

சபரிமலை பக்தர்கள் யாத்திரை: இலங்கை அரசு புதிய முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தங்கள் நாட்டு பக்தர்கள் செல்வதை புனித யாத்திரையாக அங்கீகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை விழா நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அதன் பிறகு, ஜனவரியில் முடிவடையும் மகரவிளக்கு யாத்திரைக்காக கோவில் திறக்கப்படுகிறது. புனித யாத்திரை காலம் முடிந்ததும் சபரிமலை மூடப்படும். இந்த நிகழ்வுகளில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.இதை சிறப்பிக்கும் வகையில், இலங்கையின் அதிபராகியுள்ள அனுரா திசநாயகேவின் அமைச்சரவை, ஒரு முக்கிய முடிவு குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கை:நீண்ட காலமாக, இலங்கை பக்தர்கள், கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை மண்டல பூஜை விழா மற்றும் மகரவிளக்கு உள்ளிட்ட யாத்திரைகளுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வழிபட்டு வருகின்றனர்.இந்த அடிப்படையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் யாத்திரையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.இந்த நடவடிக்கை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் மத பிணைப்பை அங்கீகரிக்கிறது. இனி சபரிமலை யாத்திரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விழாவாக கருதப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

xyzabc
ஆக 13, 2025 01:59

திராவிட மாடல் ஆட்சியினர் இதை படித்து ஹிந்து மத புறக்கணிப்பை நிறுத்த வேண்டும்.


BALOU
ஆக 12, 2025 22:42

வாழ்த்துக்கள் இலங்கை அதிபருக்கு


Sivak
ஆக 12, 2025 21:55

குல்லாக்களுக்கு எரியும் ... பாவாடைகளுக்கு பதறும் ...


ஆரூர் ரங்
ஆக 12, 2025 20:38

முதலில் இலங்கையில் ஹிந்துக் கோவில்களை ஆக்கிரமித்துள்ள ராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும். பல்லாண்டுகளாக சிதைந்து கிடக்கும் ஆலயங்களை சீரமைத்து தர வேண்டும். சிங்கள குண்டர்கள் கோயில்களை இடித்ததற்கு அரசே மன்னிப்புக் கேட்க வேண்டும். ஆலய சொத்துக்கள் திருப்பித்தர வேண்டும். தமிழர்களுக்கும் தமிழுக்கும் சம உரிமை வழங்கட்டும். அப்புறம் இங்குள்ள ஆலயங்கள் பற்றி சிந்திக்கலாம். எந்த சிங்களக்கட்சியையும் நம்புவது கஷ்டம்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 12, 2025 23:10

சிறப்பு. கேரளாவிலும், இலங்கையிலும் கம்மினிஸ்ட் ஆட்சி நடப்பதால் இந்த லவுசு.


Kudandhaiyaar
ஆக 12, 2025 20:32

அவர்களுக்கு கூட தெரிகிறது நமது அரசாங்கத்துக்கு தெரியவில்லை, சிக்கந்தர் மலை என விடியல் அரசு கூறுகிறது. இனிமேல் ஐ படை வீடாக ஆகுமா அல்லது ஒன்று ஒன்றாக குறையுமா தெரியவில்லை


M Ramachandran
ஆக 12, 2025 20:30

ஸ் டாலின் இந்த செய்தியை பார்த்து படிக்க சொல்லி கேட்டு விட்டு அதற்க்கு பதில் பார்த்து படிக்காமல் மேடையில் பேசவும்


Shankar
ஆக 12, 2025 20:24

வரவேற்கப்படவேண்டிய விஷயம்.


Kulandai kannan
ஆக 12, 2025 20:21

வரவேற்கத்தக்க முடிவு.


சமீபத்திய செய்தி