உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்!

வாஷிங்டன்: வாஷிங்டனில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கிர்க்லேண்ட் பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு, மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். லாஸ் ஏஞ்சல்சில் ஒரு வாகனம் பெரிய கூட்டத்திற்குள் புகுந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இது நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 19:34

காரணம் யார் ?? மர்ம நபரா ?? அதென்ன மர்ம நபர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் இந்திய மீடியா பெயரை மறைத்துவிடுகின்றனவே ??


Jack
ஜூலை 20, 2025 15:40

அமெரிக்க வாழ்க்கையில் மன அழுத்தமும் உளைச்சலும் அதிகம் ..


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 20, 2025 15:31

மர்ம நபர்


சமீபத்திய செய்தி