உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போருக்கு மத்தியில் இன்டர்நெட் சேவை; எலான் மஸ்க் செயலால் ஈரான் அதிர்ச்சி

போருக்கு மத்தியில் இன்டர்நெட் சேவை; எலான் மஸ்க் செயலால் ஈரான் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரானில் இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்கின் இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது ஈரானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே 3வது நாளாக போர் நீடித்து வருகிறது. ராணுவ தலைமையகம் மற்றும் அணுசக்தி நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல, இஸ்ரேலின் எரிசக்தி உள்கட்டமைப்புகள், போர் விமானங்களுக்கு எரிபொருள் தயாரிப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், தங்களின் முழு ராணுவ பலத்தின் மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே, இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வரும் ஈரான் அரசு குறித்து சமூக வலதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் விதமாக, அந்நாட்டில் இன்டர்நெட் சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையும் போது, மீண்டும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று ஈரான் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் அரசின் தடையை மீறி இன்டர்நெட் சேவையை வழங்கும் விதமாக, தொழிலதிபர் எலான் மஸ்க், தனது ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சாட்டிலைட் மூலம் வழங்கப்படும் இந்த இன்டர்நெட் சேவையை அரசின் தடையை மீறி ஈரான் நாட்டு மக்களால் பயன்படுத்த முடியும். எலான் மஸ்க்கின் இந்த செயலால் ஈரான் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. இதனிடையே, ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்கியதன் மூலம், ஈரானின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை எலான் மஸ்க் அடித்து விட்டார் என்று எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு, ஈரானில் ஸ்டார்லிங் சேவை தொடங்கியது என்று அவர் பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

மூர்க்கன்
ஜூன் 15, 2025 22:46

அமெரிக்காவிற்கு சவப்பெட்டியை ட்ரம்ப் தயார் செய்கிறார் அந்த சவ பெட்டிக்குத்தான் கடைசி ஆணி அடிக்கிறார் எலோன் மஸ்க். நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் இரானிய மக்களை தவறாக எடை போட்டு விட்டார்கள். யாரும் எதிர்பாராத புதிய நாடு அதிகார வரிசையில் முதலிடம் பிடிக்கும் என்று இதைத்தான் நாஸ்ட்ரடாமஸ் கணித்தாரோ?? இல்லாத அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.


Senthil B Kumaran
ஜூன் 16, 2025 11:55

இல்லாத கடவுள் என்பது ஏக இறைவனை சொன்னதா?


Iyer
ஜூன் 15, 2025 20:54

ஈரானில் வசித்த பார்சி மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வெளியேற்றினார்கள் அந்நாட்டு முஸ்லிம்கள். பார்சிகள் இந்தியாவுக்கு வந்து அடைக்கலம் பெற்று செழித்தார்கள். இன்று ஈரான் என்ற முஸ்லீம் நாடே அழிந்துவிடும் நிலைக்கு வந்து விட்டது.


மூர்க்கன்
ஜூன் 15, 2025 22:41

என்ன இருந்தாலும் ரத்த பாசம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 16, 2025 09:03

எந்த நாடும் அழியாது. மாற்றம் பெறும். ரத்த பாசம் கொஞ்சம் கூட இல்லாத ஒரு குறிப்பிட்ட மதம் அதிகார பசி ஆணவப் பசிக்காக மற்ற மதத்தவர்கள் இனத்தவர்களை எந்த விலை கொடுத்தாவது அழித்து அந்த குறிப்பிட்ட மதத்தின் ஆட்சி உலகம் முழுவதும் வர வேண்டும் என்று தன் முன்னோர் அரசர்கள் சொன்ன சொல்லை மூடத்தனமாக நம்பிக்கொண்டு அலைவதால் தான் உலகில் ஏதாவது ஒரு மூலையில் எப்பொழுதும் கலவரம் சண்டை போர் போன்றவைகள் நடந்து கொண்டு உள்ளது. உலகிற்கு மிகவும் அத்தியாவசியமாக தேவையான பொட்ரோலிய பொருட்கள் தங்களிடம் இருப்பதால் அதை வைத்து உலகை ஆள கனவு கண்டு கொண்டுள்ளதால் இது போன்ற போர்கள் உலகம் முழுவதும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் கண்ணதாசன் சொல்லியது போல் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. போர்கள் அணு ஆயுத யுத்தங்கள் கண்டிப்பாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.


சமீபத்திய செய்தி