உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளை கைப்பற்றியது தலிபான் ராணுவம்!

பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளை கைப்பற்றியது தலிபான் ராணுவம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதல் உக்கிரம் அடைந்துள்ளது. பாகிஸ்தானின் எல்லை சோதனைச்சாவடிகளை ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் ராணுவம் கைப்பற்றியது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.நம் அண்டை நாடான பாகிஸ்தான், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் பாகிஸ்தானில் எல்லைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் 20 இடங்களில் தலிபான் ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட இந்த தாக்குதலில் பாக்., ராணுவத்தின் பல சோதனைச்சாவடிகள் அழிக்கப்பட்டன. நான்கு சோதனைச்சாவடிகளை ஆப்கன் ராணுவம் கைப்பற்றியது.பாக்., ராணுவத்தின் டேங்க், கவச வாகனங்கள், துப்பாக்கிகளை தலிபான் வீரர்கள் கைப்பற்றினர். திடீர் தாக்குதலில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர், ஆப்கன் வீரர்களிடம் சரண் அடைந்தனர்.குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாண சோதனைச்சாவடிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி உறுதி செய்தனர். எல்லையோர பகுதிகளில், வெவ்வேறு இடங்களில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் தொடர்ந்து மோதல் நடக்கிறது. இரு நாட்டு ராணுவத்தினரும் கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் எல்லைப் பதட்டங்கள் குறித்து கத்தார் கவலை தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் தங்கள் பிரச்னைகளை தீர்க்கவும் கத்தார் அழைப்பு விடுத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

மணிமுருகன்
அக் 13, 2025 00:24

ஆப்கானிஸ்தானிடம் ஒரு வேண்டுகோள் பாகிஸ்தானில் மக்கள் நலனில் யாரும் அக்கறை கொள்ளவில்லை பாக் கைப்பற்றி அந்த மக்களுக்கு நல்லது செய்யுங்கள


மணிமுருகன்
அக் 13, 2025 00:21

இந்தக் கருத்தை ஒருவர் பதிவுட்டு உள்ளார் அதை தான் நானும் கேட்கிறேன் சவுதி அரேபியா பாக் ஒப்பந்தம் என்னவாயிற்று ஒரு வேலை இந்தியா தாக்கினால் என்று ஒப்பந்தமா இன்னொரு ட்ரோன்களை விற்றவர்கள் எங்கே


Oviya vijay
அக் 12, 2025 19:17

இப்போ தான் சவுதி போய் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்து வந்தார் பாக்கி... இதுவரை சவுதி ஒரு சத்தம் காணோம்...துருக்கி ஆள் அனுப்புவது ஏன் இன்னும் இல்லை. வெத்து வேட்டு கும்பல்


நிக்கோல்தாம்சன்
அக் 12, 2025 19:09

இதே கத்தார் எல்லையை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் போது சந்துகளை மூடிக்கொண்டிருந்தது எதனால் என்றொரு கேள்வி


கண்ணன்
அக் 12, 2025 16:15

இவர்களுக்குத் தேவையற்ற விஷங்களில் மூக்கை நுழைத்து, ஆப்பசைத்த குரங்கின் நிலையில் பாக். இனி ஆப்கான் வரக் ஐ வைத்துச் செய்வர்


குமார்
அக் 12, 2025 15:21

அவன் பாட்டுக்கு கம்முனு இருந்தான்..நீ அவன் நாட்டுல போய் வான்வழி தாக்குதல் நடத்துன (மனசுல இந்தியா னு நினைப்பு)..இனி உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது.. ஆப்கானிஸ்தான் அமெரிக்கா காரனையே அடிச்சு துரத்துனவன்..நேட்டோ படைகளை அடிச்சு துரத்துனான்..இது உனக்கு தேவையா...


Ravi Chandran K
அக் 12, 2025 14:50

இது தெரியாம போச்சே? ஆப்கன், பாகிஸ்தான் போரை நிறுத்தாம போனதாலதான் நமக்கு நோபல் கிடைக்காம போச்சா? டிரம்பின் மைன்ட் வாய்ஸ்.சண்ட போடுங்க வேண்டாம்னு சொல்லல. ஆனா எனக்கிட்ட சொல்லிட்டு போடுங்க. அப்பத்தானே சமாதானப் படுத்தி நான் நோபல் பரிசு வாங்க முடியும்.


ஆரூர் ரங்
அக் 12, 2025 14:40

ட்ரம்ப்பு க்கு அடுத்த வாய்ப்பு. உடனே நிறுத்த வைத்து பாத்திரக் கடை கோப்பை ரிசர்வ் செய்யலாம்.


Kannan Chandran
அக் 12, 2025 14:11

இதில் கத்தார் கவலைப்பட காரணம் என்ன?. கொடுக்கும் நிதியில் ஆப்பிரிக்காவில் தினந்தோரும் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு மட்டும் மகிழ்ச்சியளிக்கிறதோ?.


சுந்தர்
அக் 12, 2025 13:48

ட்ரம்ப் அடுத்து இங்க வருவார்...


சமீபத்திய செய்தி