உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.சமீப காலமாக, இந்தியாவுடனான பணிகளில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அதிபர் டிரம்ப் பலமுறை சூசகமாக குறிப்பிட்டு பேசி வருகிறார். சமீபத்தில், ''இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளோம். தற்போது சீனாவில் இருந்து ஒப்பந்தத்தை தொடங்கியுள்ளோம். நாங்கள் அனைத்து நாடுகளிடமும் ஒப்பந்தம் செய்ய மாட்டோம். சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவோம்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக, வர்த்தகத் துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக்குழு வாஷிங்டனுக்கு சென்றுள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.''உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான டிரம்ப்பின் காலக்கெடு ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைவதால், இந்த ஒப்பந்தம் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது'' என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூன் 30, 2025 11:32

இங்கேருந்து எவ்வளவு ஏற்றுமதியாகிறதோ அதே அளவுக்கு இறக்குமதி செய்யச் சொல்றாய்ங்க. இல்லாட்டி டாரிஃப், டாரிஃப், டாரிஃப்பு தான்.


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 10:19

ஒருதலைப்பட்சமாக அமெரிக்கத் தயாரிப்புப் பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்த இயலாது. இருநாட்டு உறவுகளை பாதிக்கும். நம் நாட்டு மக்கள்தான் கூடியவரை உள்நாட்டுப் பொருட்களை வாங்கி ஆதரிக்க வேண்டும். அன்னியச் செலாவணி மதிப்பைக் காப்பாற்ற உதவவேண்டும்.


புதிய வீடியோ