உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கவிழந்தது பிரான்ஸ் அரசு! பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு ராஜினாமா

கவிழந்தது பிரான்ஸ் அரசு! பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு ராஜினாமா

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது. பிரான்ஸ் நாட்டின் அதிபராக மேக்ரோன் பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட பார்லியில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார்.அவர் 2024 செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது பிரதமராக பிராங்காய்ஸ் பதவியேற்றார்.இப்படி 9 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்த பிராங்காய்ஸ் பாய்ருவுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, இந்த நம்பிக்கை ஓட்டுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டு பார்லியில் மொத்தம் 577 உறுப்பினர்கள் உள்ளனர். அவை கூடியதும், தன் மீது நம்பிக்கை வைத்து அரசுக்கு ஓட்டு அளிக்குமாறு உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் உரை நிகழ்த்துவார். அதை தொடர்ந்து ஓட்டெடுப்பு நடக்கும்.அவரது அரசு தப்பிக்க வேண்டுமெனில், பெரும்பான்மை உறுப்பினர்கள் நம்பிக்கை இருப்பதாக ஓட்டளிக்க வேண்டும். இல்லையெனில் அரசு கவிழ்ந்து விடும். அப்படி கவிழும் பட்சத்தில் பிரான்ஸ் நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்படும். புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அதிபர் மேக்ரோனுக்கு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பிரான்ஸ் பார்லியில், அரசுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்தோரின் எண்ணிக்கை 320 என்ற அளவில் உள்ளது. இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பிராங்காய்ஸ் பாய்ரு ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் கூட தனக்கு எதிராக கூட்டணி சேர்ந்து கொண்டு செயல்படுவதாக, பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SUBBU,MADURAI
செப் 08, 2025 16:14

முகலாயர்கள் நம் நாட்டை கொள்ளை அடித்த பின்பு இந்த பிரிட்டிஷ் மற்றும் ஃபிரான்ஸ் போன்ற வெள்ளைக்கார நாடுகள் நம் நாட்டு டிரில்லியன் கணக்கான செல்வங்களை கொள்ளையடித்தது மட்டும் அல்லாமல் இந்தியாவில் செயற்கை பஞ்சதை உருவாக்கி பல லட்சம் நம் முன்னோர்களை பட்டினி போட்டு சாகடித்தார்கள். அதன் விளைவுதான் நம் கண் முண்ணே அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வந்தேறி முஸ்லீம்கள் குடியிருந்து கொண்டு அகதிகளாக வாழும் அவலம்


V Ramanathan
செப் 08, 2025 15:50

பேர் பிராங்காய்ஸ் இல்லை. பிரான்ஸ்வா என்று சொல்லுவார்கள் என நினைக்கிறேன்.


டி சங்கரநாராயணன் ஈரோடு
செப் 08, 2025 15:32

பணக்கார நாடு என்றால் இப்படித்தான் இருக்கும்


தத்வமசி
செப் 08, 2025 15:30

நன்கு படித்த, பண்பாட்டு வளர்ச்சியில் கண்ட, பணக்கார நாடு. நிலையான ஆட்சியில் யாரும் அமரவில்லை. அப்படி இருக்கையில் இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியில் பிரதமர்கள் கடந்த இருபத்தைந்தாண்டுகளாக உள்ளனர். வாழ்க ஜனநாயகம்.


முக்கிய வீடியோ