உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆந்திராவில் என்கவுன்டர்: நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

ஆந்திராவில் என்கவுன்டர்: நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

நக்சல் சுட்டுக்கொலை

அதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Thravisham
நவ 18, 2025 14:20

நக்ஸல்களை திருட்டுதனமாக ஊக்குவித்த உண்டியல்கள் பாடு திண்டாட்டம்


V Venkatachalam, Chennai-87
நவ 18, 2025 14:03

வாழ்த்துக்கள். இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. இன்னும் ஒரு 900 கிலோ மீட்டர் தூரம்தான் சென்னைக்கு. உடனே வந்துடுங்க. உங்களுக்கு நல்ல வேட்டை கிடைக்கும். அது எப்புடி எங்க டமில் நாடு உங்க அஜண்டாவுல இல்லாம போச்சு. சிங்கம் புலி சிறுத்தைகள் எல்லாமே டமில் நாட்டில் இருக்குங்க. ஆனா நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும். பெட்ரோல் குண்டு வீசிடுவானுங்க. அதுனால தான் சொல்றேன்.


SUBBU,MADURAI
நவ 18, 2025 14:01

Maoist Top commander Madvi Hidma was ELIMINATED even before the November 30, 2025 DEADLINE set by security forces. Top Maoist commander Madvi Hidma, carrying a ₹1 crore bounty and involved in 26 armed attacks, has been KILLED.


S Srinivasan
நவ 18, 2025 12:27

India should be free from all naxalites and terrorists as they have links to get arm's and ammunition. kill them they are not mahatma's


naranam
நவ 18, 2025 11:39

சபாஷ்! பாராட்டுக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை