மேலும் செய்திகள்
உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு
8 hour(s) ago
பாகிஸ்தான் பள்ளிக்கே செல்லாத 2.5 கோடி குழந்தைகள்
8 hour(s) ago | 8
பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி
8 hour(s) ago
வாஷிங்டன்: வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும், அதிபர் டிரம்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கரீபியன் கடலில் பல போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதுமட்டுமன்றி 15 ஆயிரம் படைகளையும் அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் வரும்போது அமெரிக்கா மதுரோவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். மதுரோவுடன் விவாதங்கள் குறித்த விவரங்களை டிரம்ப் தெரிவிக்க மறுத்துவிட்டார்.அதேநேரத்தில், ''அமெரிக்க அரசு தனக்கு எதிராக ஒரு போரை புனைந்து வருகிறது. வெனிசுலா மக்கள் எந்தவொரு ஆக்கிரமிப்பிலிருந்தும் தங்கள் தாயகத்தைப் பாதுகாக்கத் தயாராக உள்ளனர்'' என வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில் அவர் வெனிசுலா பேச விரும்புகிறது, என தெரிவித்தார். செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து, கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்கா நடத்திய 21 தாக்குதல்களில், 83 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago | 8
8 hour(s) ago