உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ளது. இங்கு திடீரனெ இன்று (மே 22) பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இவரது விபரங்களை வெளியிட அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1wiir5ks&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்த போது, ''பாலிஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டும்'' கோஷம் எழுப்பினார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் கூறியதாவது: யூத சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது எல்லை மீறி உள்ளது. இந்த மோசமான குற்றவாளியை நாங்கள் நீதியின் முன் நிறுத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

வருத்தமளிக்கிறது!

அமெரிக்காவில், இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அதிபர் டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வெறுப்புக்கும், பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன். இந்த கொலை சம்பவத்தை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
மே 22, 2025 17:39

இதே போன்றுதான் ஹிந்துக்களை எதிர்க்கும் நாசகார குமைலை பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்ட தீவிரவாதிகளை அடியோடு அழிக்க வேண்டும் இதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பு முன் உன்னுரிமை கொடுக்க வேண்டும் ஒத்துழைக்க வேண்டும்


Ramesh Sargam
மே 22, 2025 14:30

அருமை சகோதரா டிரம்ப், இந்த துப்பாக்கி சூடு பிரச்சினைக்கு என்றைக்கு ப்ரோ முடிவு காண்பீர்கள்? உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறீர்கள். நல்லது. ஆனால் உன் நாட்டில் தினம் தினம் நடக்கும் துப்பாக்கி சூட்டை உங்களால் நிறுத்த முடியவில்லையே ப்ரோ.


SUBBU,MADURAI
மே 22, 2025 12:41

The Washington DC shooter seems to be Elias Rodriguez from the Party for Socialism and Liberation. They are funded by a bunch of other activist and Commie groups each mainly funded by Neville Roy Singham, who is an operative of the Chinese Communist Party. The CCP has a main goal of sowing unrest in the US fentanyl, student riots, etc. in order to diminish the strength of the US and become the global hegemon.


Narasimhan
மே 22, 2025 10:36

சட்டம் ஒழுங்கை பற்றி அமெரிக்கா உலகுக்கு பாடம் எடுக்கிறான். அவனை நம்பினால் ஏமாற்றம்தான் மிஞ்சும் என்பதை உலகம் குறிப்பாக இந்தியா உணர்ந்தால் போதும்.


ஆரூர் ரங்
மே 22, 2025 10:26

நாளையே டிரம்ப் தலையிட்டு இரு தரப்புக்கும் சமாதானம் ஏற்படுத்துவார்.


உண்மை கசக்கும்
மே 22, 2025 10:21

முஸ்லீம் தீவிரவாதிகள் ஹிந்துக்களை கொலை செய்த போது வாய் மூடி கொண்டு இருந்த ... உலக நாடுகள் இப்போ ஆ ஊ என்று கூச்சல் போடும்


Mecca Shivan
மே 22, 2025 09:57

நிச்சயமாக இது ட்ரம்பின் ஆதரவு இல்லாமலா நடந்திருக்கும்? இஸ்ரேலின் போர் நடவடிக்கையை நிறுத்த கத்தாருடன் தங்களது தனிப்பட்ட வியாபாரம் பெறுக கத்தாரின் ஆணைக்கு இணங்கி இந்த படுகொலையை அமெரிக்க CIA ஆதரவுடன் நடந்திருக்கலாம் ..


Balachandran Rajamanickam
மே 22, 2025 09:34

முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து மதத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்கள் . எங்கள் EVR சிறுவர்கள் எங்கே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை