உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்: அல்கொய்தா முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்: அல்கொய்தா முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அல்கொய்தா முக்கிய தலைவன் கொல்லப்பட்டான்.2025ம் ஆண்டு டிசம்பரில் சிரியாவின் பால்மைரா நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும், மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதத்தில் சிரியா மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=stuysdfw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பிடங்களை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து அமெரிக்கா அழித்து வருகிறது. அதன் முக்கிய கட்டமாக, வடகிழக்கு சிரியாவில் அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த அல் கொய்தா துணைத் தலைவன் பிலால் ஹசன் அல் ஜாசிம் என்பவனை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் மத்திய படைகள் இந்த தாக்குதலை அரங்கேற்றியதாகவும், கொல்லப்பட்டவன் கடந்த மாதம் அமெரிக்க படை வீரர்களை கொன்ற சம்பவத்தில் தொடர்பு உடையவன் என்று பாதுகாப்பு படையின் கமாண்டர் பிராட் கூப்பர் அறிவித்து உள்ளார். அமெரிக்க மக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல்களை தொடுப்பவர்கள், அதற்கான சதிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை. அவர்களை கண்டுபிடிப்போம் என்றும் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathna
ஜன 18, 2026 16:49

இங்கே போராட்டம் எதுவும் இல்லையா? சிரியாவில் அமெரிக்கா கொசு கடித்ததால், சிங்கப்பூரில் போராட்டம் என்று மூர்க்க கூட்டணிகள் தேர்தல் நேர அறிக்கைகள் எதுவுமே இல்லை. புள்ளி கூட்டணியும் அமைதியாக இருக்கிறது??


R. SUKUMAR CHEZHIAN
ஜன 18, 2026 11:23

Save Syria கும்பல்களை காணவில்லையே ஒரு வேலை சிரியாவை காப்பாற்ற அங்கு ஓடிவிட்டனரா? ஹிஹிஹிஹிஹி உலகத்தில் நல்லது நடந்தால் சரி.


உண்மை கசக்கும்
ஜன 18, 2026 09:00

உலகின் பல நாடுகளின் உள்ளே சென்று தீவிரவாதிகளை கொன்று குவிப்பதாக சொல்லும் அமெரிக்கா ஒசாமா பின் லாடன் சம்பவதிலிருந்து தொடர் கதையாகி விட்டது. இது சரியாகவே இருந்தாலும் மற்ற நாடுகளின் உள்ளே புகுந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தி பல அப்பாவிகளின் உயிரையும் குடிக்கும் ரத்த காட்டேரியாக டிரம்ப் மாறுகிறார்.


V RAMASWAMY
ஜன 18, 2026 08:48

If they really mean eliminating terrorists, why they are keeping mum on terrorists in our neighbouring country? Why they are pally with them?


SUBBU,MADURAI
ஜன 18, 2026 08:35

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் அமெரிக்கா ஒரு புற்றுநோய் அமெரிக்கா மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவை புற்றுநோய்கள். இவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க இஸ்லாமே தீர்வு என்று தீவிரவாத கருத்துக்களை ஓபனாக பேசி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியாவில் தீவிரவாதிகளை ஒழிக்க கிளம்பியிருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இவர்களை ஏன் இன்னும் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தவில்லை?


தியாகு
ஜன 18, 2026 08:46

ஹி...ஹி...ஹி...வேறொன்றுமில்லை அமெரிக்காவில் இருக்கும் கட்டுமர திருட்டு திமுககாரன் எவனாவது ஓட்டு வங்கி அரசியலை டிரம்ப்கும் சொல்லி கொடுத்திருப்பான். டுமிழ்நாட்டில் இருப்பது போல எங்கே மூர்க்க கும்பல் ஓட்டுக்கள் வராதோ என்று பயந்து அவர்கள்மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை