உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உச்சம் தொட்ட விலைவாசி உயர்வு; உணவு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தார் அதிபர் டிரம்ப்

உச்சம் தொட்ட விலைவாசி உயர்வு; உணவு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிகரித்து வரும் விலை உயர்வால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், மாட்டிறைச்சி, காபி மற்றும் பிற விவசாய பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இவ்வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தும் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதன் தாக்கம் சமீபத்தில் நடந்த நியூயார்க் மேயர், நியூ ஜெர்சி மற்றும் விர்ஜினியா மாகாணங்களுக்கான கவர்னர் தேர்தல்களில் எதிரொலித்தது. இந்தத் தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்தது.இதையடுத்து, மாட்டிறைச்சி, அன்னாசி பழம், காபி, வாழைப்பழங்கள், தேநீர், பழச்சாறுகள், கொக்கோ, சில உரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பொருட்கள் மீதான பரஸ்பர வரிகளை நீக்குவதாக டிரம்ப் நேற்று அறிவித்தார்.இந்நடவடிக்கைக்கு, அமெரிக்க உணவு தொழில்துறை சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அமெரிக்க மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இந்த உத்தரவினால் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

கண்ணன்
நவ 16, 2025 16:06

அச்சச்சோ, வரி நிரம்பப் பிடிக்கும், அதனால் நிறைய வழுவாய் என்று இவரது அடிவருடிகள் கூவினரே! இப்போது வருவாய் குறையுமே! படிப்பறிவற்ற கூட்டத்தைக் கட்டிக் கொண்டு இவர் அழுகிறார்!


பேசும் தமிழன்
நவ 16, 2025 14:10

இந்தியாவில் இருந்து எந்த பொருளை அவர்கள் இறக்குமதி செய்தாலும்.... நாம் அதற்க்கு ஏற்றுமதி வரியை அதிகரிக்க வேண்டும்...எங்களுக்கு அதிகமாக வரி போட்டீர்கள் அல்லவா ??


HoneyBee
நவ 16, 2025 12:50

இன்னும் எத்தனை கஷ்டங்களை அமெரிக்கா தாங்க போகிறதோ. மக்கா பாத்து சூதானமா நடந்துக்கோக.. அம்புட்டு தான் ஜோலி முடிஞ்சு


R.MURALIKRISHNAN
நவ 16, 2025 12:46

இது வேற டிரம்ப். அவன் நானில்லை


Ramesh Sargam
நவ 16, 2025 12:17

இன்னும் எப்படி எல்லாம் அமேரிக்க மக்கள் கஷ்ட பட போகிறார்களோ…?


arunachalam
நவ 16, 2025 11:08

இந்தாள தேர்ந்தெடுத்ததுக்கு அமெரிக்க வாழ் பணக்காரர்கள், கொஞ்ச நாளைக்கு பழஞ்சோறு ஊறுகாய் தொட்டு சாப்பிடுங்க. அப்பத்தான் புத்தி வரும்.


Ramesh Sargam
நவ 16, 2025 10:56

தவறான தடாலடி முடிவுகள். பிறகு தவறுகளை திருத்தி அறிக்கை. அண்ணனுக்கு ஆளுமை போதாது. பதவி விலகுவது நல்லது.


Sudha
நவ 16, 2025 10:38

வடிவேலு அமெரிக்கா


ராமகிருஷ்ணன்
நவ 16, 2025 09:55

மற்ற நாட்டு மக்களுக்கு விலைவாசியை உயர்த்தி விட்டு, உன் நாட்டு மக்களுக்கு விலையை குறைகிறே. என்ன கொடுமை சரவணா. உன் நாட்டு மக்களும் அவதிப்படனும்.


ஆரூர் ரங்
நவ 16, 2025 09:45

டிரில்லியன் டாலர் கடனை அடைக்க வரி வருவாய் வேண்டியுள்ளது. அதே வரி மக்கள் தலையில் விடிகிறது. ஆக கழுதை முன்னே போனால் கடிக்கும். பின்னே போனால் உதைக்கிறது.