உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா

வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெளிநாட்டவர்களின் வேலைக்கான அனுமதியை தானாக நீட்டிப்பு செய்யும் முறையை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவர் திட்டவட்டமாக உள்ளார். இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கான இஏடி எனப்படும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை தானாக நீட்டிக்கும் வசதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'அக்.,30 மற்றும் அதற்கு பிறகு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு, இனி தானியங்கி மூலம் நீட்டிப்பு வழங்கப்படாது. பொதுமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பைக் காக்கும் விதமாக, மேலாண்மை மற்றும் தணிக்கையை அரசு முன்னுரிமையாகக் கொண்டுள்ளது,' என தெரிவித்துள்ளது.வெளிநாட்டவர்கள் தங்கள் வேலைக்கான அனுமதி காலம் முடிந்த பின்னரும், கூடுதலாக 540 நாட்கள் அமெரிக்காவில் பணியாற்ற, முந்தைய பைடன் அரசு நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. தற்போது, அந்த நடைமுறைக்கு மாற்றாக, இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. டிரம்ப் அரசின் இந்த உத்தரவால், வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்கு பெருமளவில் பணியாற்றும் இந்தியர்களுக்கே பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Jey a
அக் 30, 2025 17:40

அமெரிக்காவில் போனவுடன் இந்தியாவை நக்கல் அடிப்பவர்கள் இந்த இந்தியர்கள் ,இவ்வளதுக்கும் இவர்கள் வெறும் தற்காலிக வேலை வீசாவில் போனவர்கள் , இப்ப இங்கேயே ஓடி ஒழித்து இருக்காங்க ,, யூடூபில் பொடும் கூத்தை பாத்து இருப்பீர்கள்


HoneyBee
அக் 30, 2025 16:09

சீக்கிரம் அமெரிக்காவை சூடான் மாதிரி ஆக்காம விடப் போவதில்லை இந்த ஜோக்கர்.. சீக்கிரம் ஆடிய ஆட்டம் முடியும்


karan
அக் 30, 2025 15:10

Good job trump is doing for his country


sundar
அக் 30, 2025 15:06

அமெரிக்காவின் சுற்றுலா துறை படுத்தே விட்டது. பெரும்பாலான airports kaatru vaangugiradhu. USA will become next Bangladesh soon.


KavikumarRam
அக் 30, 2025 14:47

டிரம்ப் அவர் நாட்டுக்கு அவர் நாட்டு மக்களுக்கு எதை நன்மைன்னு நினைக்கிறாரோ அதை செய்கிறார். நமது அரசாங்கமும் நமது ஐஐடி ஐஐஎம் மற்றும் மிகச்சிறந்த ப்ரேமியம் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் திறமையான மாணவர்களை வெளிநாடுகளில் பணிபுரிய ஒரு வரைமுறை கொண்டுவரவேண்டும். அவர்களை இந்தியாவில் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே மத்திய அரசாங்கம் பல ஆண்டுகளாக இதை செய்து கொண்டிருந்தாலும் மேலும் விளம்பரப்படுத்தி சலுகை ஊக்குவிக்க வேண்டும். பெங்களூரில் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இந்த மாதிரி ஏகப்பட்ட ஸ்டார்ட்டப் நிறுவங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் மிகவும் குறைவு. நமது இண்டெலெக்சுவல் ப்ராப்பர்டியை அமெரிக்காவுக்கு கடத்துவதை நிறுத்தினாலே ஸ்ரீதர் வேம்பு சொன்ன மாதிரி நாம் வெளிநாடுகளை நம்பி போய் இந்த மாதிரி அவமானப்பட்டு தொங்க வேண்டியதில்லை.


Vasan
அக் 30, 2025 14:37

"Short term gain" most often results in "long term loss".


SUBRAMANIAN P
அக் 30, 2025 13:38

ட்ரம்ப் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை அடிக்கடி எடுக்கவேண்டும். அப்போதுதான் ட்ரம்ப் பதவிக்காலம் முடியும்போது அமெரிக்கா திவாலாகும்.


Field Marshal
அக் 30, 2025 14:15

முறையான ஆவணங்கள் இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் தங்கி வேலை பார்க்கிறார்கள் ..ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது ..கார் ஓட்டுவார்கள் ...வீட்டு வேலை முதல் அனைத்து வேலையும் சர்வ சாதாரணமாக செய்கிறார்கள்


Senthoora
அக் 30, 2025 13:11

அப்ப சரி, இனி ஏர்போர்ட், மால்களில் எங்கும் குப்பை, கழிவறைகள் நாறும், டாக்சி குறைவாய் திணறுவாங்க, கம்ப்யூட்டர்கள் கிராக் ஆகும்,


ram
அக் 30, 2025 13:10

இங்கு இயங்கும் அமெரிக்கா RELATED கம்பெனிகளை தடை செய்ய வேண்டும்


Gnana Subramani
அக் 30, 2025 12:59

ட்ரம்பின் அழகான அன்பு நண்பர் மோடிஜி இது பற்றி உடனே பேசி தீர்த்து வைப்பார்


kumarkv
அக் 30, 2025 14:28

ஏன்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 30, 2025 14:49

உங்க கும்பல் எப்பவும் அடுத்தவன் கஷ்டத்தில் சுகம் காணும்


duruvasar
அக் 30, 2025 17:14

அறிவான அப்பாவை மறந்துவிட்டிர்களே. நேற்றுதான் எனக்கு எல்லாம் தெரியும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் பணிவன்போடு கூறினார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை