உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபரின் இந்திய பயணம் ரத்து?

அமெரிக்க அதிபரின் இந்திய பயணம் ரத்து?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'குவாட்' தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வர வாய்ப்பில்லை என, செய்தி வெளியாகியுள்ளது. சர்வதேச உறவுகளை பேணும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் இணைந்து, 2007ல் துவங்கிய அமைப்பு தான் குவாட். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். எனினும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே குவாட் உருவாக்கப்பட்டதாக கூறுவதுண்டு. இதனால், சீனா தீவிரமாக எதிர்த்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்றிருந்தபோது, டெலாவரில் நடந்த நான்காவது குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அடுத்த உச்சி மாநாட்டை இந்தியா நடத்த வேண்டும் என, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டார். இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். அதன்படி, 2025 குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவில் நடக்கும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பது சந்தேகம் தான் என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசோ, வெள்ளை மாளிகையோ இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பேசும் தமிழன்
செப் 01, 2025 20:26

எங்களது நாட்டின் மீது வரி தாக்குதல் நடத்தி விட்டு..... எங்கள் நாட்டுக்கு வராமல் இருப்பதே நல்லது..... நீங்கள் வரவேண்டிய தேவையில்லை.


KavikumarRam
செப் 01, 2025 11:26

Mr. Trump, please dont come to India. Better go to Pakistan and get nasty yourself.


Anand
செப் 01, 2025 11:11

கலைத்துவிடுங்கள்.


Columbus
செப் 01, 2025 08:52

President Trump cancelled many engagements due to health reasons.Such as Labour Day address. This is just one of them.


Palanisamy Sekar
செப் 01, 2025 06:31

ட்ரம்ப் வராமல் இருப்பதே அவருக்கு நல்லது. இல்லையென்றால் கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்திய மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். ஒருமுறை இந்திய எதிர்ப்பினை எதிர்கொண்டால் அதற்கு பிறகு அவர் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அதே போன்று எதிர்ப்பினை சந்திக்க நேரிடும். அமெரிக்காவின் மானமே போகும். சீன இந்திய உறவு மலர்ந்துள்ள நேரத்தில் டிரம்புக்கு இதுபோன்ற அமைப்புக்கு செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. டிராகன் யானை நட்பு மிக அவசியமென்று சீன அதிபரும் மோடியும் ஒருங்கிணைந்து பேசிவிட்டார் என்பதால் ட்ரம்ப் வருவதற்கு ஆயிரம் முறை யோசிப்பார். ரத்து செய்வதே பெஸ்டு


K V Ramadoss
செப் 01, 2025 07:30

உண்மைதான் ..ஆனாலும் சீனாவை முற்றிலும் நம்ப முடியாது .. முதுகில் குத்தினவர்கள்.. சுயநலம் பிடித்தவர்கள்.. தன காரியம் ஆகும்வரை ஓட்டுவார்கள் ..காரியம் ஆனபின் மாறிவிடுவார்கள்.. அமெரிக்காவில் டிரம்புதான் அதிகார மமதை காட்டுகிறார்.. அங்கு இந்தியாவின் நண்பர்கள் இன்றும் இருக்கிறார்கள்.. காலம் இப்படியே ஓடாது..


மூர்க்கன்
செப் 01, 2025 09:45

அதிமுக அல்லக்கைகளுக்கு மூளை குறைவு?? சர்வதேச உறவுகளை பேண இந்தியாவில் படித்த பண்பான நல்ல திறமையானவர்கள் இருக்கிறார்கள். அல்லக்கைகள் வழக்கமான வாழ்க ஒழிக கோஷம் போட்டால் மட்டுமே போதுமானது??


KavikumarRam
செப் 01, 2025 11:33

சீனா நமது எதிரி. அதனால் நேரு இந்திரா ராஜீவ் சோனியா காங்கிரசுக்கு பிறகு நாம் எப்பவுமே சீனாவை வலிமையாக எதிர்கொண்டு வருகிறோம். நமது எதிரி என்பதால் அவர்களது நகர்வுகளை நாம் தீவிரமாக கண்காணித்துக்கொண்டும் பதிலடி கொடுத்துவிடும் இருக்கிறோம். அதனால் அதே கவனத்துடன் தான் சீனனை நாம் வைக்கவேண்டிய தூரத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அமெரிக்கா எப்பவுமே நமக்கு துரோகிதான். அவனை மட்டுமே சேனாக்காரனை விட கூட பத்தடி தள்ளி நின்னு தான் நாம் சமாளிக்கணும்.


Anand
செப் 01, 2025 11:51

படித்த பண்பான நல்ல திறமையானார்கள் என்றால் திருட்டு கட்சியினரா?


jss
செப் 01, 2025 15:07

சர்வதேச உறவுகளில் திமுக அல்லக்கைகள் என்ன படி புத்திசாலிகளா?. இரண்டுமே மக்குப் பண்டாரங்கள். திமுக என்பது ஏதோ பெரிய அப்பாடக்கர. போல் பதுவிடுகிறீர்கள். ஊழலிலதான் அவர்களை முஞ்ச உலகில் ஆல் இல்லை. மற.ற எல்லாவற்றிலும. கடைசி இடம்.தான்


ராஜ்
செப் 01, 2025 23:36

சீனாவை நம்பக்கூடாது என்று நமக்கு தெரிந்தது இந்தியாவுக்கும் தெரியும் எல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தான். இந்தியாவும் கவனமாக தான் கை ஆளும். இந்த நட்பு தற்காலிகம் தான் என்று இருவருக்கும் தெரியும்.


மூர்க்கன்
செப் 02, 2025 11:15

சிறுவயதில் அறிந்த கதை இது. ஒரு பெரு மழை பெய்யும் பொழுதில் சிறு வளைக்குள் எலி செல்லும்போது அங்கே ஒளிந்திருந்த பூனையை கண்டு மிரண்டது ஆனால் வெளியே பெரும் மலைப்பாம்பு அப்பகுதியை கடக்கும் வரை பூனையும் எலியும் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் வெளியே வந்தால் மலைப்பாம்பு விழுங்கி விடும் என்கிற அச்சத்தில் பூனையின் மடியில் எலி இருந்தது. மலைப்பாம்பு சென்றதும் எலி பத்தடி தள்ளி விலகி ஓடியது அப்போது பூனை கேட்டது இவ்வளவு நேரம் என்மடியில் அச்சமின்றி இருந்தாய்?? இப்போது ஏன் விலகி செல்கிறாய் என்றது?? அதற்கு எலி ஆபத்தான சூழ்நிலையில் நீ என்னை கொல்ல துணிய வில்லை. இப்போது ஆபத்து விலகி விட்டதால் உன்னுடைய இயல்பான குணம் தலை தூக்கிவிடும் அதனால் என்னை தற்காத்து கொள்ள நான் விலகி செல்கிறேன் என்று சொல்லியது அந்த எலி. இங்கே மலைப்பாம்பு யார் ?? பூனை யார்?? எலி யார் ? என்பதை வாசகர்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.


புதிய வீடியோ