உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது சரியே: சொல்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: ''ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதித்தது சரியான யோசனை,'' என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல முயற்சிகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லை . இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். இதில் 25 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதம் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா தெரிவித்திருந்தது. மேலும், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது, அமெரிக்காவின் வரி விதிப்பு யோசனை சரியானது தான். ஐரோப்பிய நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல. ரஷ்ய அதிபர் புடின் மீது கூடுதல் அழுத்தம் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில ஐரோப்பிய நாடுகள், தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குகின்றன; இது நியாயமில்லை.ரஷ்யாவிடம் இருந்து எந்த வகையான எரிபொருளையும் வாங்குவதை நாம் நிறுத்த வேண்டும். ரஷ்யாவுடன் தொ டர்ந்து ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் மீது, வரிகளை விதிப்பது சரியான யோசனை. கொலையாளியை நிறுத்துவதற்கான ஒரே ஒரு வழி இதுதான். எதிராளிகளின் ஆயுதத்தை பறிப்பதுதான் சரி; எரிசக்தி தான் அவர்களுடைய ஆயுதம். என் நா டு ஏவுகணைகளால் சூழப்பட்டிருக்கும் போது, போர் நிறுத்தம் குறித்து பேச நான் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு செல்ல முடியாது; அது சாத்தியமற்றது. வேண்டுமானால், ரஷ்ய அதிபர் புடின், எங்களுடைய தலைநகர் கீவ்க்கு வரலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் போர் நிறுத்தம் குறித்து நடத்திய பேச்சினால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதற்கு மாறாக ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலுவான பதிலை நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 15, 2025 03:50

அப்போ ஜீக்கு நோபல் பரிசுக்கு வாய்ப்பே இல்லையா?


M Ramachandran
செப் 10, 2025 12:28

முதலில் உங்க கூட்டம் வரும் குளிர்காலத்தில் மடிவீர்கள் என்ற அடிப்படை உண்மையை கூட தெரியாத மதி இழந்து கூப்பாடு போடாதெ. ஐரோப்பா முழுவதும் ரஸ்சிய எரிவாயுவை நம்பித்தான் பொழப்பு ஓடுது. இப்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கு. நிறுத்தினால் ரசியா சமாளிக்கும் வல்லமையை பெற்றிருக்கு. உங்க பாடு டப்பா ஆடிடும். மூளையை கசக்கி யோசித்து பேசு. அமெரிக்கன் ஆதிக்கத்தை ஐரோப்பாவிலிருந்து விரட்டுங்கள் எல்லாமே சரியாகி விடும். ரசியாவும் உங்க எல்லோருக்கும் உற்ற தோழனாகி விடும். பொருளாதார வீழ்ச்சியை இப்பொ எல்லா நாடுகளும் சந்தித்து கொண்டிருக்கின்றன. கூடிய விரைவில் அமெரிக்கணும் அதனை நேர் கொள்ள வேண்டியிருக்கும். பெட்ரோல் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கு. இதை வைத்து அவன் பிற ஏற்காமல் நாடுகளிடமிருந்து வைத்திருக்கும் பெட்ரோலை மற்ற நாடுகளிடம் விற்று லாபம் பார்க்க எண்ணுகிறான்.


M Ramachandran
செப் 10, 2025 12:15

இவன் ஒரு சரியான அறிவாளி. இவன் தங்கும் அமெரிக்கானால் தான் இவனும் இவன் நாடும் சீரழிந்து கொண்டிருக்கு. சாவி கொடுத்த பொம்மையாக ஆடிக்கொண்டிருக்கிறான். அமெரிக்கன் இவன் வழங்கலிய்ய சுரண்டிக்கோண்டு போக போகிறான். அவன் நோக்கமும் அதுவெ ஆகும்.


venugopal s
செப் 09, 2025 23:25

எதிரியின் நண்பனும் எதிரி தான் என்று நினைக்கிறார்!


kurinjikilan
செப் 09, 2025 18:36

Doller rate 10 years back was around 67 rupees..


Anvar
செப் 10, 2025 18:45

அப்போ உங்களுக்கு 10 வருடம் முன்னர் கொடுத்த சம்பளம் கொடுத்தா உங்களுக்கு போதுமா ?


Dinesh Pandian
செப் 09, 2025 18:00

இவருக்கு டீசல் எதுக்கு தரனும் ?


என்றும் இந்தியன்
செப் 09, 2025 16:42

அப்போ உக்ரைனும் டாஸ்மாக்கினாடும் ஒன்றா . ஜெலென்ஸ்கி - ரஷியன் ஸ்டாலின் - ஓங்கோல் தெலுங்கு ஜெலென்ஸ்கி - ஜோக்கர் சினிமாவில் ஸ்டாலின் - உண்மையில் ஜோக்கர்


Sekar
செப் 09, 2025 15:53

இவன் ஆபத்தானவன். இவன் மேற்கத்திய நாடுகளின் அல்லக்கை. இவனை விட்டு தள்ளுவோம். நமது நாட்டின் பணமதிப்பு இழப்பை பற்றி சிந்திப்போம். நாம் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக இருப்பதாக சொல்லி கொள்கிறோம் உண்மையில் டாலர் இணையான இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்தில் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த பத்து வருடங்களுக்கு முன் 1 டாலர் 50 ரூபாய் இருந்தது இப்பொழுது 1டாலர் 88 ரூபாய் உள்ளது. நமது பொருளாதார புலிகள் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் பேப்பர் அளவில் உள்ளது.


MUTHU
செப் 10, 2025 08:44

எல்லாரும் தாங்கினால் இப்படித்தான் நடக்கும்.


Anvar
செப் 10, 2025 19:08

நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ன நினைக்கிறீர்கள் என்ன செய்தால் நம் நாட்டின் பண மதிப்பு கூடும் ?


Ram
செப் 09, 2025 15:42

கூத்தாடிக்கு அதிபர் பதவி கொடுத்த மக்களை சொல்லணும், அவனுக்கு ஒட்டு போட்டு அரியணையில் வைத்த மக்கள் பாவம் எல்லாத்தயும் இழந்துட்டு அவராலே செத்துக்கிட்டு இருக்காங்க எப்படி இருந்த நாட்டை இப்படி ஒன்னும் இல்லாம ஆகிட்டாரு இந்த கூத்தாடி


மொட்டை தாசன்...
செப் 09, 2025 15:40

உன்னைவிட பலமடங்கு ராணுவ பலமுள்ள ரஷ்யாவை சண்டையிட்டு ஜெயிக்கமுடியாதுஎன்கிற அடிப்படை ஞானம் கூட இல்லாத உன்னை அதிபராக்கிய மக்கள் தான் பாவம். நாட்டின் கனிம வளங்களை விற்று சொந்த மக்களை கொன்று நீ சாதிக்கப்போவது என்ன ? நீ இழந்த நிலப்பகுதிகளை ஒருநாளும் ரஷியாவிடமிருந்து மீட்கப்போவதில்லை. முதலில் உன் நாட்டை காப்பாற்றும் வழியை பார் ,பிறகு இந்தியாவிற்கு கூடுதல் வரிவிதிப்பு சரியா தப்பா என்று பிறகு பட்டிமன்றம் வைத்துக்கொள்ளலாம் .


சமீபத்திய செய்தி