உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஷேக் ஹசீனா ஏன் குற்றவாளி என முத்திரை குத்தப்படுகிறார்: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா காட்டம்

ஷேக் ஹசீனா ஏன் குற்றவாளி என முத்திரை குத்தப்படுகிறார்: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா காட்டம்

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ள தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நாடு கடத்தப்பட்ட வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாக சாடியுள்ளார்.அவரது பதிவு: முகமது யூனுஸ் மற்றும் அவரது ஜிஹாதி படைகளால் ஹசீனா அநீதியானவர் என்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள், யூனுஸ் மற்றும் அதே ஜிஹாதி படைகள் அதே செயல்களைச் செய்யும்போது, ​​அவர்கள் அவற்றை நீதியானவை என்று அறிவிக்கின்றன. யாராவது நாசவேலைச் செயல்களைச் செய்து தற்போதைய அரசு அவர்களைச் சுட உத்தரவிடும்போது, ​​அரசு தன்னை ஒரு குற்றவாளி என்று கூறுவதில்லை. கடந்த ஜூலை மாதம் நாசவேலைச் செயல்களைச் செய்தவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனா ஏன் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்?ஜூலை மாதம் நாசவேலைச் செய்த பயங்கரவாதிகள், மெட்ரோவுக்கு தீ வைத்தவர்கள், மக்களைக் கொன்றவர்கள், போலீஸ் அதிகாரிகளைக் கொன்றவர்கள் ஏன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட மாட்டார்கள்? வங்கதேசத்தில் நீதியின் பெயரால் நடக்கும் கேலிக்கூத்து எப்போது முடிவுக்கு வரும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லை

அதேபோல் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து நிருபர்களிடம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியதாவது: உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, எனக்கு மரண தண்டனையில் நம்பிக்கை இல்லை. அதனால் அது மிகவும் கலக்கமூட்டும் விஷயமாக பார்க்கிறேன். மரண தண்டனைகள் கொடுக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஷேக் ஹசீனா விஷயத்தில் அவர் இல்லாதபோது விசாரணை நடத்துவதும், தன்னை தற்காத்துக்கொள்ள வாய்ப்பளிக்காமல் மரண தண்டனையை அறிவிப்பது என்பது நியாயமற்றது. வேறொரு நாட்டின் நீதித்துறையின் உள் விஷயங்கள் குறித்து நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமானதல்ல. இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

V Gandhi Rajan
நவ 18, 2025 19:13

Sheikh Hasina refused to give St Martin Island to United States to setup their war base. Consequently her govt was tumbled indirectly by US which is their usual practice, with many countries who had lost their power & they are either imprisoned or hanged. For example Sadam Hussain of Irak. She served the country as PM for about 20 years & developed the Bangladesh. They are number 1 exporters of garments & in many fields. Sentenced to hane her is the act of interim govt led by US & its Deep State & not by the citizens of Bangladesh. People know this very well & they should pro against the interim govt & save their country from the hands of US culprits.


சிந்தனை
நவ 18, 2025 17:17

கொள்ளையடிக்க வந்த வெள்ளையர்கள் இங்கே ஆட்சி செய்த போது வெள்ளையர்களுக்கு சாதகமாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பாதகமாகவும் செயல்பட்டவர்கள் தானே இந்த கூலிக்கு வேலை செய்யும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்


Rathna
நவ 18, 2025 16:59

உலகம் முழுவதும் அந்த சமூகத்திற்கு ஜனநாயகம் பிடிக்காது. அங்கே தடி எடுத்தவன் தண்டல் காரன் ஆட்சி தான் பிடிக்கும். தினமும் ரத்தம் பூமியில் படாமல் அவர்களால் வாழ முடியாது. எதாவது ஒரு இடத்தில அமைதியாக வாழ்ந்ததாக வரலாறு உள்ளதா.


என்றும் இந்தியன்
நவ 18, 2025 15:52

அப்போ ஹெக்ஹ் முஜிபுர் ரஹ்மான் குற்றவாளி என்று அதற்காகத்தான் 1975ல் மிலிடரியால் கொலை செய்யப்பட்டாரா???


duruvasar
நவ 18, 2025 14:33

I would like the Madurai man comes with the perverted statistics on such incidences, if any, happened in India especially in the state of UP and Gujarat


SUBBU,MADURAI
நவ 18, 2025 16:11

நீங்கள் மதுரை மனிதர் என்று பொத்தாம் பொதுவாக கேட்டால் அதற்கு நான் பதிலளிக்க போவதில்லை என் பெயரும் ஊரும் தங்களுக்கு தெரியும்தானே அதனால் என் பெயரை குறிப்பிட்டு கேளுங்கள் தங்களுடைய கேள்விக்கு ஒரு Article யே போடுகிறேன்..


Kulandai kannan
நவ 18, 2025 13:43

நல்லவேளை ஆமார்த்திய சென் நம் நாட்டில் ஆட்சிக்கு வரும் சாத்தியக் கூறு இல்லை.


RAMESH KUMAR R V
நவ 18, 2025 13:42

அநீதி.


SUBBU,MADURAI
நவ 18, 2025 12:58

Former Bangladeshi PM Sheikh Hasina sentenced to death for crimes against humanity. I believe Its to keep her party away from participating in upcoming elections so that Khaleda zia BNP gets a walkover. Yunus might meet the same fate as many dictators in the past.


முக்கிய வீடியோ