மேலும் செய்திகள்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 20 பேர் பலி
08-Mar-2025
கீவ்: உக்ரைன் அதிபரின் சொந்த ஊரில் நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.உக்ரைன்,ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன் முக்கிய கட்டமாக அமெரிக்கா முன்மொழிந்துள்ள 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இருநாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fnlxnt4q&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்ய படைகள் திடீரென ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சொந்த ஊராக கிரிவ்வி ரிக் பகுதியில் நடைபெற்று ஏவுகணை தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். 61 பேர் படுகாயம் அடைந்தனர்.குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும், 5 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர். தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு கொடூரமான தாக்குதல் என்றும் அவர் கூறி உள்ளார்.
08-Mar-2025