உள்ளூர் செய்திகள்

டாக்டர் வி சோமாஸ்கந்தனுக்கு நொய்டா VPS பாராட்டு

உலகளாவிய மனித அமைதி பல்கலைகழகத்தில் (Global Human peace University), இருந்து முனைவர் பட்டம் பெற்றதற்காக வி.சோமாஸ்கந்தன் கௌரவிக்கப்பட்டார். நொய்டாவில் உள்ள பழமையான விநாயகர் கோயிலில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில், செக் 22ல் இது நடைபெற்றது. நொய்டா மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து அவரது நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வி பி எஸ் துணைத் தலைவர் வி விஸ்வநாதன் டாக்டர் சோமாஸ்கந்தனை வரவேற்றார், தலைவர் ரவி சர்மா அவரை கவுரவித்தார். டாக்டர் சோமாஸ்கந்தன் வி பி எஸ் உடன் நீண்ட தொடர்பு பற்றி ரவி சர்மா குறிப்பிட்டார். வி பி எஸ்இன் V வேதமூர்த்தி, அவரது அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவை, 1997 ஆம் ஆண்டு முதல் 2010வரை செக்டர் 22 ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலைக் கொண்டு வருவதில் குறித்து வந்திருந்த பக்தர்களிடம் தெரிவித்தார். வி பி எஸ் க்கு நன்றி தெரிவித்த டாக்டர் சோமாஸ்கந்தன், தான் செக்டார் 22 கோவிலுக்குச் சென்ற ஆரம்ப நாட்களைப் பற்றியும், தினசரி கோவில் சடங்குகளை எப்படி நிர்வகித்து வந்தார் என்றும் பேசினார். முந்தைய கமிட்டி உறுப்பினர்களை நினைவு கூறுகையில், அவர்கள் எவ்வாறு மற்றும் தினசரி பூஜைகள் மேற்கொள்வதில் அவருக்கு உதவியாக இருந்தார், என்பதை கூறினார். டாக்டர் சோமாஸ்கந்தன் முப்பத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக டில்லி மற்றும் நொய்டாவில் சேவை செய்து வருகின்றார். 1990 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ உத்தர வேத பாடஷாலா என்ற பெயரில் வேத பாட ஷாலா நடத்துகிறார், அங்கு அவர் இருபதுக்கும் மேலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது . - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !