உள்ளூர் செய்திகள்

தமிழர் நலக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

டில்லி, மயூர் விஹார்-3, தமிழர் நலக் கழகம், 78ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை விநாயகர் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடத்தியது. பிரியங்கா கவுதம், கவுன்சிலர் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். குழந்தைகள் சுதந்திர தினம் பற்றி பேசியும், பாட்டு பாடியும் மற்றும் தியாகிகள் போல் வேடமிட்டும் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு விழா இனிதே முடிந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செவ்வனே செய்திருந்தார்கள். - நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !