உள்ளூர் செய்திகள்

விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் மஹன்யாச ஏகாதச ருத்ர பாராயணம்

புதுதில்லி: விகாஸ்புரி சி பிளாக்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் மஹன்யாச ஏகாதச ருத்ர ஐபம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, விகாஸ்புரி பிராத்தனா குழுவினர் செய்து இருந்தனர். வேத விற்பன்னர்கள், ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று ருத்ர பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், அர்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, ஸ்ரீ பில்வாஷ்டகம், ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதீ நடைபெற்றன. கல்யாண கணபதி, தேவி மூகாம்பிகை, சுப்பிரமணியர், அனுமன் மற்றும் வீரபத்ரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவுருவச் சிலைகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதையடுத்து, ருத்ர ஹோமம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பிரதி மாதம் முதல் வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தோறும், ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் விகாஸ்புரி பிராத்தனா குழுவினர் ஏற்பாட்டில் இக்கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !