பால் ஸ்ரீ திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு விருது - 2025
புதுடில்லி : டில்லியில் 'பால் ஸ்ரீ' திருவாரூர் டி.எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமாஜம், ரோகிணி உடன் இணைந்து நடத்தும் நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் முழு விவரம் இதோ :நாள்: ஞாயிறு, 28 செப்டம்பர் 2025இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோவில், 7வது செக்டார், ரோகிணி, புதுடில்லி - 110085.நேரம்: மாலை 6.00 மணி - எஸ். விக்னேஷ், வயலின் இசைக் கச்சேரி, விக்னேஷ் ஜெயராமன் - மிருதங்கம், எம். ஸ்ரீராம் - கஞ்சிராமாலை 6.30 மணிடெல்லி சகோதரிகள் ஷைலஜா - செளந்தர்யாவின் கர்நாடக இசைக் கச்சேரி, எஸ். விக்னேஷ் - வயலின், விக்னேஷ் ஜெயராமன் - மிருதங்கம், எம். ஸ்ரீராம் - கடம்.'பால் ஸ்ரீ' திருவாரூர் டி.எஸ். நினைவு விருது - 2025- டெல்லி சகோதரிகள் ஷைலஜா - செளந்தர்யா - கர்நாடக இசை (வாய்ப்பாட்டு)- ஹிமான்ஷி கோயல் (பரதநாட்டியம்)- எஸ். விக்னேஷ் (வயலின்)- எம். ஸ்ரீராம் ( கடம்)தலைமை விருந்தினர்: எஸ். விஜயராணி, IRS, கூடுதல் இயக்குநர் ஜெனரல், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம், நிதி அமைச்சகம், இந்திய அரசு.கவுரவ விருந்தினர்கள்: கே.வி.கே. பெருமாள், நிறுவனர்- தலைவர், தில்லி கம்பன் கழகம், பி.கே. குருவாயூரப்பன், தலைவர், ஸ்ரீ அய்யப்பன் கோவில், ரோகிணி.தொகுப்பாளர்: குமாரி அதிதி நேகி- புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.