விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் சிறப்பு புஷ்பாஞ்சலி
விகாஸ்புரி ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவிலில் சிறப்பு புஷ்பாஞ்சலிபுதுடில்லி : விஜயதசமியை ஒட்டி,விகாஸ்புரி சி பிளாக்கில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகைக்கு மந்திரங்கள் முழங்க, பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து, லலிதா அஷ்டோத்திரம் வாசிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, விகாஸ்புரி பிரார்த்தனா குழுவினர், ஸ்ரீ மூகாம்பிகை கோயில் தியானம் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து செய்திருந்தனர்.- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்