இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதாட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உலக தமிழ் காப்பக கூட்டியக்கம் சார்பில் எழும்பூர் பகுதியில் பேரணி சென்றனர்.
21-02-2026 | 19:07
சம வேலைக்கு சம ஊதியம், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழும்பூர் பகுதியில் பேரணி சென்றனர்.
21-02-2026 | 19:06
தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மெயின் அருவியில் காத்திருந்து குளித்து செல்லும் சுற்றுலா பயணியர்.
21-02-2026 | 19:05
பூந்தமல்லி முதல் கலங்கரைவிளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை பணிகள் முடிவடைந்ததையடுத்து பூந்தமல்லி அருகே முல்லைத்தோட்டம் நிறுத்தத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
21-02-2026 | 19:04
.குப்பைகள். கட்டிடக் கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்க பெருங்குடி ஏரியை சுற்றி மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
21-02-2026 | 19:03