மேலும் செய்திகள்
பலா சீசன் களைகட்டியது தினமும் 15 டன் வரத்து
28-Apr-2025
பலாப்பழ எரிசேரி அல்லது சக்க எரிசேரி என்பது கேரளாவில் பலாப்பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் 'சைடு டிஷ்' ஆகும். பல முக்கிய நிகழ்வுகளில் இதை சமைக்கின்றனர். செய்முறை
பலாப்பழத்தை காய்கறி வெட்டுவது போல் வெட்டவும். பலாப்பழ கொட்டைகளை எடுத்து வெயிலில் காய வையுங்கள். சாம்பாருக்கு பயன்படுத்தலாம். வெட்டிய பலாப்பழத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் துாள், தேவையான அளவு உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 8 முதல் -10 நிமிடம் கொதிக்க விடுங்கள். நான்கு பச்சை மிளகாய், அரை மூடி துருவிய தேங்காய், கொஞ்சம் கறிவேப்பிலை, ஐந்து பல் பூண்டை அம்மிக்கல்லில் போட்டு அரைத்து கொள்ளவும். மிக்சி பயன்படுத்தாமல் மசாலா தயாரிக்க முயற்சிக்கவும். பலாப்பழம் வெந்துவிட்டதா என்பதை பார்த்து அத்துடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும். தண்ணீர் 100 மி.லி., தண்ணீர் சேர்த்து, அனைத்தையும் நன்றாக கலக்கவும். மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து கொள்ளுங்கள். கடுகு வெடித்தவுடன், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். இத்துடன் நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள். அடுப்பை அணைத்து விட்டு, கால் மூடி தேங்காய் துருவல் சேர்க்கவும். இந்த சூட்டிலேயே தேங்காய் வறுபட்டுவிடும். இதை பலாப்பழத்துடன் கலந்துவிட்டால் சுவையான பலாப்பழ எரிசேரி ரெடி.சிலர் பலாப்பழ கொட்டையை பயன்படுத்தி எரிசேரி செய்கின்றனர். வெள்ளை காராமணியை வேகவைத்து எரிசேரியில் சேர்க்கின்றனர்.நீங்களும் காராமணி சேர்க்க நினைத்தால் மசாலா போடும் முன் சேர்க்கலாம். - நமது நிருபர் -
28-Apr-2025