உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  பருப்பு உருண்டை குழம்பு

 பருப்பு உருண்டை குழம்பு

- நமது நிருபர் -: வீட்டிலேயே, எளிய முறையில், சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்து அசத்தலாம். இதை செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது. தேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 3/4 கப் கடலை பருப்பு - 1/4 கப் பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - நெல்லிக்காய் அளவு சாம்பார் துாள் - 3 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 10 தக்காளி - 2 பூண்டு - 10 பல் செய்முறை கடலை பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பு, உப்பு, பெருஞ்சீரகம், பூண்டு ஆகியவற்றுடன் மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். இதில், நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்து உருண்டை பிடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். இதில், வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். இதில், சாம்பார் துாள், உப்பு சேர்த்து லேசாக வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இதில், குழம்பு நன்கு கொதித்ததும், உருண்டைகளை மெதுவாக போட்டு, 10 நிமிடம் கொதிக்க விடவும். அவ்வளவு தான் பருப்பு உருண்டை குழம்பு தயார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை