துாயமல்லி காரசேவு
இரும்பு, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ, பி, இ, புரதம் உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை கொண்ட துாயமல்லி அரிசியில் காரசேவு செய்யலாம். செய்முறை துாயமல்லி அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மிளகாய் துாள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியை சூடேற்றி எண்ணெயை காய்ச்சிக் கொள்ளவும். நன்கு காய்ந்ததும் சேவு பிழியும் அச்சத்தில் மாவை வைத்து பிழிந்து எடுத்தால் போதும். சுவையான, ஆரோக்கியத்துடன் கூடிய துாயமல்லி அரிசி காரசேவு ரெடி. - நமது நிருபர் -