எங்கிருக்கிறது சந்தனமலை? | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
கந்த சஷ்டி வாரத்தில் சூரசம்ஹாரம் நிகழும் திருச்செந்துõர் தலம் பற்றி அறிவது இதயத்துக்கு இனிமை அளிக்கும். திருச்செந்துõரை இலக்கியங்களில் திருச்சீர் அலைவாய் என குறிப்பிட்டுள்ளனர். அலைகள் பொங்கும் கடலோரத்தில் இருப்பதால் இப்படி ஒரு பெயர். முருகனின் மற்ற படைவீடுகள் மலை மீது இருக்க திருச்செந்துõரில் மட்டும் மலை இல்லையே என எண்ணத்தோன்றும். ஒரு காலத்தில் இங்கு சந்தனமரங்கள் அடர்ந்த மலை இருந்தது. அப்போது இத்தலத்தை சந்தன மலை என்றும் மலைவாய் என்றும் அழைத்தனர். அந்த மலை கடலால் மூழ்கடிக்கப்பட்டது. மக்கள் அடிக்கடி கடல் சீற்றத்தால் சிரமப்பட்டனர். பிறகு கடற்கரையில் பால முருகனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதும் கடல் அடங்கி விட்டது.
அக் 31, 2024