ஆறுபடை வீட்டை வணங்கும் பலன் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
சஷ்டி விரதநாட்களில் முருகனின் ஆறுபடை வீடுகளையும் வணங்கினால் சிறந்த பலன்களை அடையலாம். திருப்பரங்குன்றம்- செல்வவளம் திருச்செந்துதுõர்-எதையும் சாதிக்கும் திறமை பழநி- பாவம் தீர்தல், புண்ணியம் சேருதல் சுவாமிமலை- கல்வியில் வளர்ச்சி திருத்தணி- திருமணத்தடை நீங்குதல் தம்பதி ஒற்றுமை சுமங்கலி பாக்கியம் சோலைமலை- சகல சவுபாக்கியம் இந்த தலங்களுக்கு கந்தசஷ்டியன்று செல்லும் பக்தர்கள் சூரசம்ஹாரம் முடியும் வரை ஓம் முருகா என்ற மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். முருகனுக்குரிய துதிப்பாடல்களைப் படிக்கலாம். இரண்டு வேளை பழம் பால் சாப்பிடலாம். மாலையில் சூரசம்ஹாரம் தரிசித்த பின் நீராடிவிட்டு சாதம் சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யம் என்னும் உணவு படைக்கும் நிகழ்ச்சியில் பிரசாதம் வாங்கி சாப்பிடலாம்.