திருமலைக்கு புறப்பட்ட வெண்பட்டு திருக்குடைகள் Hindu Darmartha Samiti| RR Gopalji | Vedantham Ji
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் கருட சேவை உற்சவம் முக்கிய இடம் பிடிக்கும். ஏழுமலையானின் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோயிலில் புதனன்று துவங்கியது. காலை கோயில் வளாகத்தில் நடந்த துவக்க விழாவில், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி அனைவரையும் வரவேற்றார். திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் ஆசி வழங்கி, காவி கொடி அசைத்து திருக்குடை உற்சவத்தை துவங்கி வைத்தார்.