சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம்
சென்னை தியாகராய நகர், வெங்கட் நாராயண சாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
செப் 21, 2024