இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணம் | Tambaram | Passenger fights with ticket
இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து முதல் வகுப்பில் பயணம் / Tambaram / Passenger fights with ticket inspector தாம்பரம் ரயில் நிலைய பிளாட்பார்மில் டிக்கெட் பரிசோதகரும் பயணி ஒருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். விசாரணையில் சண்டை போட்ட பயணி ரயிலில் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொண்டு முதல் வகுப்பில் பயணம் செய்து உள்ளார். டிக்கெட் பரிசோதகர் பயணியிடம் அபராதம் செலுத்த படி கூறிய போது இருதரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் கைகலப்பில் முடிந்தது. இருவரும் மாறி மாறி பயணிகள் முன்னிலையிலே கட்டி புரண்டு சண்டை போட்டதுடன் பிளாட்பார்ம் கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த பயணிகள் சமாதானம் செய்து வைத்தனர். இருவரும் சமாதானம் ஆன நிலையில் பயணி அபராதம் தொகையை செலுத்தி விட்டு சென்றார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.