/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பழைய டூ வீலர் விற்பவரின் பரிதாபங்கள் |போதையில் சிக்கும் வாகன ஓட்டிகள் வண்டி விலையை மிஞ்சும் அபராதம்
பழைய டூ வீலர் விற்பவரின் பரிதாபங்கள் |போதையில் சிக்கும் வாகன ஓட்டிகள் வண்டி விலையை மிஞ்சும் அபராதம்
கோவையில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய டூ வீலர்களுக்கு இணையாக பழைய டூ வீலர்கள் விற்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக பழைய டூ வீலர் விற்பவர்கள் நிலை பரிதாபத்துக்குரியதாகி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதத் தொகை தான் காரணம் என்று கூறப்படுகிறது. மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி இரண்டு முறை மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சிக்கினால் ரூ. 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது வண்டி விலையை விட அதிகமாகும். இப்படி பழைய டூ வீலர் விற்பவர்களின் சிரமங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 19, 2025