பறவைகளின் தாகம் தணிக்க தண்ணீர் வையுங்க...
கோவையில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல், பறவைகள், நாய். பூனைகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு தண்ணீர் வைப்பது அவசியமாகிறது. மக்களை சார்ந்து வாழும் பறவைகள் ஏராளமாக உள்ளன. அவை வீடுகள் அதிகம் இருக்கும் பகுதிக்கு தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் தேடி வருகின்றன. இதற்காக மாணவர்களுக்கு மண் குவளைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கோடைகாலத்தில் பறவைகளின் தண்ணீர் தாகம் தீர்க்க மண் குவளைகள் வைப்பதன் அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 28, 2024