/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வால்பாறை மலைப்பாதையில் உருண்ட அரசு பஸ் | bus accident | 49 Passengers injured | valparai
வால்பாறை மலைப்பாதையில் உருண்ட அரசு பஸ் | bus accident | 49 Passengers injured | valparai
வால்பாறை மலைப்பாதையில் உருண்ட அரசு பஸ் / bus accident / 49 Passengers injured / valparai திருப்பூர் டு வால்பாறைக்கு நேற்றிரவு அரசு பஸ் இயக்கப்பட்டது. 60 பயணிகள் பயணித்தனர். வால்பாறை வரும் வழியில் நள்ளிரவு 2:50 மணிக்கு டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதையில் 33 வந்து கொண்டை ஊசி வளைவில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 49 பயணிகள் காயமடைந்தனர். இவர்களுக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 19 பயணிகள் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வால்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
மே 18, 2025