இப்படியும் தானம் செய்யலாம் | புதிய முயற்சியில் கோவை இளைஞர்
கோவை வடவள்ளியில் காபி கடை வைத்து நடத்தி வருபவர் சத்யன். இவருடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏழைகளுக்கு தானம் செய்ய விரும்பினால் அதற்கான தொகையை கடை முன்பு உள்ள போர்டில் எழுதி விடுவார்கள். அதற்கு கடை நடத்துபவரும் உணவு விலையில் சலுகை அளிப்பார். இதன் வாயிலாக ஏழைகளுக்கு அன்னதானம் செய்த திருப்தி வாடிக்கையாளர்களுக்கும்,கடைக்காரருக்கும் கிடைக்கிறது. ஏழைகளுக்கு வழங்கப்படும் அன்னதானம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 10, 2024