சுய நலம் கருதி 100 ஆண்டுகள் பழமையான கோயிலை இடிக்க முயற்சி | DMK tried to demolish the temple
சுய நலம் கருதி 100 ஆண்டுகள் பழமையான கோயிலை இடிக்க முயற்சி | DMK tried to demolish the temple | Mettupalayam கோவை காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள இந்த கோயிலின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் உள்ளது. இதை இடிப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக பிரமுகர் ஒருவரின் சுய நலன் கருதி கோயிலை இடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாரதிய ஜனதா கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர் விக்னேஷ் கூறுகையில், யாருக்கும் தொல்லையின்றி மேம்பாலத்துக்கு அடியில் ஒதுக்கு புறமாக இருக்கும் கோயிலை திமுக முன்னாள் மற்றும் இந்நாள் மூத்த நிர்வாகிகளின் துண்டரின் பேரில் நெடுஞ்சாலைத்துறை இடிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கோயிலின் அருகே உள்ள குடியிருப்பு கட்டடத்துக்கு மறைப்பு ஏற்படுவதால் கோயிலை இடிக்க சதி நடக்கிறது. கோயிலை தொட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார். பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பைத் தொடர்ந்து கோயிலை இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.