பார்க்கிங் வசதி இல்லாத கோவை அரசு மருத்துவமனை... மக்கள் அவதி
கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களது வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்த அனுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் வாகனங்களை அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கிறார்கள். அதற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கிறார்கள். வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைக்குள் வாகனங்களை நிறுத்த நிர்வாகம் அனுமதிப்பதில்லை. வெளியே நிறுத்த போலீசார் அனுமதிப்பதில்லை. இதனால் வெறுப்பின் உச்சிக்கே செல்லும் வாகனஓட்டிகள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 22, 2024