குளக்கரையில் டாஸ்மாக்... பேராபத்தில் செங்குளம்
கோவை சுண்டக்காமுத்துார் செங்குளத்தையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. அந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடை வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும். விவசாயம் செய்ய முடியாது. டாஸ்மாக் கடை திறப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 29, 2026