சிவராத்திரி கோலாகலம் | பாத ரட்சை அணிந்து பூசாரி ஊர்வலம்
கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர் உள்ளது. இங்கு சிவராத்திரி விழாவை ஒட்டி மகாலட்சுமி திருக்கோயில், வீரபத்திரசாமி- தொட்டம்மாள் திருக்கோவில், வேட்டைக்கார சாமி கோவில்களில் இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் அருகே உள்ள மைதானத்தில் மூன்று கோவில்களின் சுவாமிகளும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, கோவிலை நோக்கி திருவீதி உலா வந்தது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடந்தன. வேட்டைக்கார சாமி கோவில் ஊர்வலத்தின் போது, கோவில் பூசாரி காலில் பாதக்கொரடு எனும் ஆணிக்கால் பாத ரட்சையை அணிந்து ஊர்வலமாக நடந்து வந்தார். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 27, 2025