வாகன ஓட்டிகளை சுற்ற வைக்கும் சுந்தராபுரம் 'சிக்கல்' சிக்னல்
கோவை சுந்தராபுரம் சிக்னல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக யு டேர்ன் முறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. மேலும் அதிக வாகனங்கள் செல்லும் மதுக்கரை சாலை குறிச்சியில் இருந்து வரும் பகுதி மூடப்பட்டுள்ளது. தற்போது யு டேர்ன் முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை. யு டேர்ன் முறையினால் கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தற்போதுள்ள நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 15, 2025